| நிகும்பலை யாகப் படலம் | 797 |
| தொக்கனர், அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற, புக்கது, கவிப் பெருஞ் சேனைப் போர்க் கடல். | அக்கணத்து, அடுகளத்து அப்பு மாரியால் - அப்பொழுது போர்க்களத்திலே அம்பு மழையால்; உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் - உயிர் நீங்கினோர் போக எஞ்சி உயிரோடுள்ள அரக்கர்கள் எல்லோரும்; அரக்கனை தொக்கனர் சூழ்ந்து சுற்றுற - இந்திரசித்தனை (க்காவலாக) சூழ்ந்து நிற்றி நிற்க; போர் கவிப் பெருஞ் சேனைக் கடல் புக்கது - பொருதற்றொழிலை உடைய வானரப் பெருஞ்சேனையாகிய கடல் (அவ்வரக்கர் மேற் சென்று) புகுந்தது. | (58) | 8992. | ஆயிரம் மலருடை ஆழி மாப் படை, ‘ஏ’ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும், தூயவன் சிலை வலித் தொழிலும், துன்பமும் மேயின வெகுளியும், கிளர வெம்பினான். | ஆயிரம் மலருடை ஆழி மாப்படை - ஆயிரம் தாமரை என்னும் அளவினைக் கொண்ட கடல் போன்ற பெரிய (அரக்கர்) சேனை; ‘ஏ’ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் - ‘ஏ’ என்னும் அளவில் அழித்த (இலக்குவனது) வெற்றித்திறமும்; தூயவன் சிலை வலித் தொழிலும் துன்பமும் - தூயோனாகிய இலக்குவனது விற்றொழில் வன்மையும் (தான் தொடங்கியவேள்வி) முற்றுப் பெறாமையால் தான் அடைந்த) துன்பமும்; மேயின வெகுளியும் கிளர வெம்பினான் - (அதுபற்றிப்) பொருந்திய கோபமும் (தன் உள்ளத்திற்) பொங்கி எழ (இந்திரசித்து) மனம் வெதும்பினான். | மலர் - தாமரை. இங்கு ஒரு பேரெண்ணைக் குறித்தது. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன பேரெண்களைக் குறிப்பனவாம். இதனைத் தொல்காப்பிய எழுத்ததிகார 393- ஆம் நூற்பாவிற் காணலாம். ‘ஏ’ எனும் மாத்திரை. ‘ஏ’ என்னும் கால அளவுக்குள் விரைவுக்குறிப்பு. இறுதல் - அழித்தல். கொற்றம் - வெற்றி. தூயவன் - இலக்குவன். வெம்பியவன் - இந்திரசித்து. | (59) | 8993. | மெய் குலைந்து, இரு நில மடந்தை விம்முற, செய் கொலைத் தொழிலையும், சென்ற தீயவர் மொய் குலத்து இறுதியும், முனிவர் கண்டவர் கை குலைக்கின்றதும், கண்ணின் நோக்கினான். |
|
|
|