இருநில மடந்தை மெய் குலைந்து விம்முற - பெரிய நில மகளாகிய பூமிதேவியும் உடல் நடுங்கித் துன்புறும்படி; செய்கொலைத் தொழிலையும் - இலக்குவன் செய்யும் கொல்லுதல் தொழிலையும்; சென்ற தீயவர் மொய் குலத்து இறுதியும் - போர் மேற்சென்ற அரக்கர் குலத்தின் அழிவையும்; கண்டவர் முனிவர் கை குலைக்கின்றதும் - (போர்க்களத்தைக்) கண்ணுற்றவர்களாகிய முனிவர்கள் கை விதிர்த்தலையும்; கண்ணின் நோக்கினான் - (இந்திர சித்து நேரே) கண்களாற் கண்டான். |
பொறையிற் சிறந்த பூமி தேவியும் அரக்கர்களின் மடிந்து வீழும் உடற்பொறை தாங்கலாற்றது குலைந்தனள் என்றார். |
(60) |
இந்திரசித்தன் நியமம் குலைந்து வருந்திப் புலம்புதல் |
8994. | மானமும் பாழ்பட, வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட, முடிவு இலா முரண் சேனையும் பாழ்பட, சிறந்த மந்திரத்து ஏனையும் பாழ்பட. இனைய செப்பினான். |
மானமும் பாழ்பட - தனது பெருமை பாழ்பட்டொழியவும்; வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட - (தான்) இயற்றிய வேள்வியில் மோன நிலைபாழ் பட்டொழியவும்; முடிவு இலா முரண் சேனையும் பாழ்பட - எல்லையற்ற வலிமை வாய்ந்த (தனது) சேனை வெறுமையுற்று அழியவும்; சிறந்த மந்திரத்து ஏனையும் பாழ்பட - சிறந்த மந்திரம் செபம் முதலாக உள்ள ஏனைய வேள்விக் கிரியைகளும் பாழ்பட்டுச் சிதையவும்; இனைய செப்பினான் - இத்தகைய மொழிகளைக் கூறினான் (இந்திரசித்து). |
மானம் - தன்னிலையிற் தாழாமையும்; ஊழ் வயத்தால் தாழ்வு வந்தால் உயிர் வாழக் கருதாமையுமாகிய பெருமை. |
(61) |
8995. | ‘வெள்ளம் ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின் உள்ளது அக்குரோணி ஈர்-ஐந்தொடு ஓயுமால்; எள்ள அரு வேள்வி நின்று, இனிது இயற்றுதல் பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால். |
வெள்ளம் ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின் - இருபத்தைந்து வெள்ளம் என்னும் தொகையினதாகி விரிந்து பரவிய சேனையில்; உள்ளது அக்குரோணி ஈர் ஐந்தொடு ஒயுமால் - எஞ்சி உள்ளது |