பத்து அக்குரோணி சேனை (அதுவும்) தளர்ந்து ஒழியும்; எள்ள அருவேள்வி நின்று இனிது இயற்றுதல் பிள்ளைமை - இகழ்தற்கரிய யாகத்தினை இடம் பெயராது நின்று இனிது இயற்றுதல் என்பது சிறு பிள்ளைத்தனம்; அனனயது சிதைந்து பேர்ந்ததால் - அந்த வேள்வி வேரறச் சிதைந்து போயிற்று. |
வெள்ளம் என்பது பேரெண். கோடி x கோடி x கோடி x கோடி x கோடி - என 57 ஆம் தானத்தது வெள்ளம் என்பர். அக்குரோணி என்பது 21870 தேர்களும், 21870 யானைகளும், 65610 குதிரைகளும், 109350 காலாட்படை வீரர்களும் ஆகிய பெருஞ்சேனை என்பர். |
(62) |
8996. | ‘தொடங்கிய வேள்வியின் தூம வெங் கனல் அடங்கியது அவிந்துளது, அமையுமாம் அன்றே? இடம் கொடு வெஞ் செரு வென்றி இன்று எனக்கு அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால். |
தொடங்கிய வேள்வியின் தூம வெங்கனல் - தொடங்கிச் செய்த புகையொடு கூடிய வெம்மை உடைய தீ; அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே? - (மேலோங்கி எரியாமல்) அடங்கியதாய் அவிந்துள்ளது ஒன்றே போதுமல்லவா? இடம் கொடு வெஞ்செரு இன்று எனக்கு வென்றி - இடத்தைக் கொண்டு நிகழும் கடும் போரில் இன்று எனக்கு வெற்றி; அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் - இல்லையாகி அடங்கியது என்பதற்குரிய தீய நிமித்த மாகும். |
(63) |
8997. | ‘அங்கு அது கிடக்க; நான் மனிதற்கு ஆற்றலென் சிங்கினென் என்பது ஓர் எளிமை; தேய்வுற, இங்கு நின்று, இவை இவை நினைக்கிலேன்; இனி, பொங்கு போர் ஆற்றல் என் தோளும் போனதோ? |
அது அங்கு கிடக்க - (வேள்வி அழிந்தமையாகிய) அது ஒருபுறம் கிடக்க; நான மனிதற்கு ஆற்றலென் சிங்கினென் என்பது ஓர் எளிமை - நான் மனிதற்கு வலியற்றேனாய் (ஆற்றலின்) குறைந்தேன் என்று எண்ணுவது எளிமையின் பாலதாகும்; தேய்வு உற இங்கு நின்று இவை இவை நினைக்கிலேன் - (எனது வலிமை) தேய்ந்து ஒழியுமாறு இவ்விடத்தில் நின்று இத்தகைய எண்ணங்களை நினைக்க மாட்டேன்; இனி பொங்கு போர் ஆற்றல் |