நஞ்சுதோய் அமுதம் - பிரிவில் நஞ்சாயும் சேர்வதில் அமுதாயும் உள்ள நிலை. உம்மை நினைப்பு விட்டு ஆவி போக்க அஞ்சினேன் - உம்மை நினைப்பதை விட்டு விட்டால் என்னுயிர் போய் விடும் என்பதை வேறு வகையாகச் சொல்லியது. அமுதின் வந்தீர் - அவதார உணர்வு இன்றி அழகுணர்வால் கூறியது. மாதர் என்பதில் அர் அசை ஆர் உயர்வுப் பன்மை விகுதி.
|
(10)
|
7642. | ‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம் தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!
|
தோற்பித்தீர் - யார்க்கும் தோலாத என்னை நுமக்குத் தோற்கச் செய்து; மதிக்கு மேனி சுடுவித்தீர் - சந்திரனால் என் உடம்பைச் சுடுமாறு செய்தீர்; தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் - தென்றல் காற்றுப்பரவி வீசக் காம வெப்பத்தால் புழுங்கிய உடம்பு வேர்க்குமாறு செய்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர் - என் உறுதியான தோளை மெலியச் செய்தீர்; வேனில் வேளை ஆர்ப்பித்தீர் - வேனிலைத் துணையாகக் கொண்ட மன்மதனை ஆர்ப்பொலி செய்யச் செய்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர் - எனக்குத் துன்பம் என்பது என்ன என்பதை அறியும்படி செய்தீர்; அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் - தேவர்களின் அச்சத்தை நீக்குவித்தீர்; இன்னம் என் என் செய்வித்துத் தீர்திர் - இன்னும் என்னென்ன துன்பங்களை எனக்கு விளைவித்துத் தீர்வீரோ?
|
காம வயப்பட்ட பெருவீரனை ஒரு பெண் படுத்தும் பாட்டை இப்பாடல் தெரிவிக்கிறது. அம்மா - வியப்புக் குறித்தது.
|
(11)
|
7643. | ‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி, கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து |