| புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத் திண்டாடினன், வந்த சினத் திறலோன்.
|
அவ் இராமன் எனும் களிமா - அந்த இராமன் என்கின்ற மதங் கொண்ட யானை; உண்டாடிய வெங்களன் ஊடுருவ கண்டான் - (உயிர்களை) விழுங்கி விளையாடிய கொடிய போர்க்களத்தை முற்றும் ஊடுருவிக் கண்டான்; புண்தாள் உறு நெஞ்சு புழுக்கம் உறத் - (கண்டகாட்சியால்) புண்பட்ட (தன்) மனம் புழுங்கி அவலிக்க; வந்த சினத்திறலோன் திண்டாடினன் - (போருக்கு வந்த) பெருஞ்சினமும் வலியும் உடைய அதிகாயன் வருந்தினான்;
|
களிமா - மதங்கொண்ட யானை, உண்டாடிய - உயிர்களை உண்டு விளையாடிய, களன் - கடைப்போலி. உறு நெஞ்சு - வினைத்தொகை.
|
(27)
|
| 7754. | மலை கண்டனபோல் வரு தோளோடு தாள் கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம், நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந் தலை கண்டிலன், நின்று சலித்தனனால்.
|
மலை கண்டன போல் வரு தோளொடு - மலையைக் கண்டாற் போன்று (விளங்கி) வருகின்ற தோள்களுடன்; தாள் கலை கண்ட கருங்கடல் கண்டு - தாள்களும் கலைதல் பொருந்திய கருமையான கடலைக் கண்டு; (கும்பகருணன் உடல்) உளவாம் நிலை கண்டன கண்டு - (அவனுக்கு) நேர்ந்துள்ள நிலைமைகளை (மனத்தில்) எணணிக் கண்டு; (வருந்திய அதிகாயன்) ஒரு தாதை நெடுந் தலை கண்டிலென் - ஒப்பற்ற தந்தையாகிய (கும்பகருணனது) பெரிய தலையைக் கண்டிலேன் என்று; நின்று சலித்தனனால் - (எண்ணி) நின்று வருந்தினான்.
|
கலைகண்ட கருங்கடல் - கலைதல் பொருந்திய கருமையான கடல், ஈண்டுக் கும்பகருணன் உடம்பு. தோளும் தாளும் தலையும் அற்ற தாதையின் உடம்பு கண்டு அதிகாயன் வருந்தினான் என்க. சலி்த்தல் - வருந்துதல்.
|
(28)
|
| 7755. | ‘மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான் திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண் |