பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 801

ஒதுங்கினர்,  ஒருவர்  கீழ்   ஒருவர்   புக்குறப்   பதுங்கினர்
நடுங்கினர்
-  (குரங்குகள்   வீசிய   குன்று   மரம்   முதலியன  தம்
மேற்படாதவாறு)   ஒதுங்கி   விலகிய   அரக்கர்கள்,  ஒருவரின்  பின்
ஒருவராகப்    புகுந்து    பதுங்கியவர்களாய்     அஞ்சி   நடுங்கினர்;
பகழி பாய்தலின் - (இலக்குவனது)  அம்பு  (தமது உடம்பிற்) பாய்தலால்;
குடர் பிதுங்கினர் உடல்  பிளவு  பட்டனர் - குடல்  பிதுங்கியவர்களும்,
உடல் பிளந்தவர்களும்; மதம்புலர் களிறு  எனச் சீற்றம் மாறினார் -
மதம் வற்றிச் செருக்கடங்கிய யானையைப் போன்று சினம் ஒழிந்தார்கள்.
 

                                                 (67)
 

9001.

வீரன் வெங் கணையொடும் கவிகள் வீசிய
கார் வரை அரக்கர்தம் கடலின் வீழ்ந்தன,
போர் நெடுங் கால் பொர, பொழியும் மா மழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய.

வீரன்    வெங்கணையொடும்  -  இலக்குவன்  ஏவிய   கொடிய
அம்புகளோடு;  கவிகள்  வீசிய கார் வரை - வானரங்கள் வீசிய கரிய
மலைகள்;  அரக்கர்   தம்   கடலின்  வீழ்ந்தன  -  அரக்கருடைய
சேனையாகிய கடலில் வீழ்ந்தவை; போர் நெடுங் கால்பொர - பொருது
அலைக்கும்  நெடிய பெருங்காற்று மோதுதலால்; பொழியும்  மாமழைத்
தாரையும்
  -   பொழிதலை   உடைய   கரிய  மழை   மேகங்களின்
நீர்த்தாரையும்;   மேகமும்  படிந்த  தன்மைய  -  (அவற்றையுடைய)
மேகங்களும் ஒருசேர (கருங்கடலில்) படிந்த தன்மையை ஒத்தன.
 
                                                (68)
 
                    அனுமன் இந்திரசித்தனை எள்ளி நகையாடுதல்
 
9002.

திரைக் கடற் பெரும் படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி,
அரக்கனுக்கு அணித்து என அணுகி, அன்னவன்
வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான்;
 

திரைக்  கடற்  பெரும்  படை  இரிந்து  சிந்திட - அலைகளை
உடைய கடல் போலும் (அரக்கரது) பெரும் சேனை நிலை கெட்டு  சிதறி
ஓட; மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி -  மரத்தினால்
புடைத்துத்  தாக்கி  வெகுண்ட அனுமன்; அரக்கனுக்கு அணித்து என
அணுகி
- இந்திரசித்துக்கு அருகாக நெருங்கி நின்று;