பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 803

முழுவதனையும்     இனிதே  தங்கி  இருந்து; இயற்கை  தாங்கும்
பாந்தளின் பெரிய  திண்தோள்  பரதனை
- இயல்பாகத் தாங்குகின்ற
ஆதிசேடனைக்  காட்டிலும்  பெரிய  திண்ணிய  தோள்களை உடைய
பரதனும்; பழியின்  தீ்ர்ந்த  வேந்தனைக்  கண்டு  -  பழியினின்றும்
நீங்கிய  வேந்தனுமாகியவனைக்  கண்டு; நீ  நின்  வில்  வலி காட்டி
மீண்டு  போந்ததோ?
 -  நீ உனது வில் வலிமையைக் காட்டி மீண்டு
வந்தாயிற்றோ? உயிரும் கொண்டே?  ஆயினும்  புதுமை அன்றே -
அதுவும் உயிருடனேயோ? ஆயினும் இது மிகவும் புதுமையன்றோ?
 

                                                 (71)
 

9005

‘அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி,
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த
நம்பியை, முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன
தம்பியை, கண்டு, நின்தன் தனு வலம் காட்டிற்று உண்டோ?
 

அம்பரத்து  அமைந்த வல்லில்  சம்பரன்  ஆவி  வாங்கி  -
வானுலகத்தே  (போர்  மேற்கொண்டு)  தங்கிய வலிய விற்படையினை
உடைய  சம்பரன்  என்னும் அசுரனது உயிரைக் கவர்ந்து; உம்பருக்கு
உதவி   செய்த   ஒருவனுக்கு
  -   தேவர்களுக்கு   உதவி  புரிந்த
ஒப்பற்றவனாகிய  தசரதனுக்கு;  உதயம்  செய்த  நம்பியை  - பிறந்த
குணங்களால்  உயர்ந்தவனை; முதல்வர்  ஆன  மூவர்க்கும் நால்வர்
ஆன  தம்பியை
 -  முதல்வரான   மூவர்க்குப்  பின்னே  அவர்கள்
நால்வராகும்   வண்ணம்  தோன்றிய  தம்பியாகிய  சத்துருக்கனனை;
கண்டு நின் தனுவலம் காட்டிற்று உண்டோ? - கண்டு நீ நினது வில்
வலிமையைக் காட்டியது உண்டோ?
 

                                                 (72)
 

9006

தீ ஒத்த வயிர வாளி உடல் உற, சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும், வாயினும், கண்களூடும்,
பாய, போய், இலங்கை புக்கு, வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப் போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மடியும் அன்றே!