அதிகாயன், இலக்குவன்பால் தூது அனுப்புதல்
|
| 7757. | என்னா, முனியா, ‘இது இழைத்துளவன் பின்னானையும் இப்படிச் செய்து பெயர்ந்து, அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்’ என்று உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்:
|
என்னா முனியா - என்று கூறிச் சினந்து; இது இழைத்துளவன் பின்னானையும் - இச்செயலைச் செய்தவனாகிய (இராமன்) பின் பிறந்த (இலக்குவனையும்); இப்படிச் செய்து பெயர்த்து - இத்தன்மையன் (ஆகும்படி) செய்து போய்; அன்னான் இடர் கண்டு - அந்த இராமனுடைய துன்பத்தைக் கண்டு; இடர் ஆறுவென் என்று உன்னா - (என்) துனபம் தணிவேன் என்று நினைத்து; ஒருவற்கு - ஒரு தூதுவனுக்கு; இது உணர்த்தினனால் - இதனை உணர்த்தல் ஆனான்.
|
இப்படிச் செய்தல் - கும்பகருணனைச் செய்தது போல் கைவேறு கால்வேறாகச் செய்தல். முனியா, உன்னா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சங்கள். ஒருவன் - மயிடன் (அடுத்த பாடல் கொண்டு இதை உணரலாம்.)
|
(31)
|
| 7758. | ‘வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில் போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்; நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்; மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்.
|
மயிடன் நீ வா - மயிடனே நீ வா; ஒருவல் விசையில் நீ போ - ஒப்பற்ற மிக்க வேகத்தோடு (புறப்பட்டு) நீ போய்; அவ் இலக்குவனில் புகல்வாய் - அந்த இலக்குவனிடத்தில் சொல்லுவாய்; நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால் - நான் (இலக்குவனை முண்டமாகச் செய்யும்) இச்செயலை ஆராய்ந்து துணிந்துள்ளேன்; மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் - சிறந்த நீதியை உணர்ந்து சொல்லுவாய்.
|
நண்ணுதல் - ஆராய்தல், ஈது - இலக்குவனை தோளும் தாளும் அற்றவனாகச் செய்தல். நான்காவது அடியில் ‘நீதியை உன்னி’ என்ற பாடம் ஓசை நலன் கருதிக் கொள்ளப்பெற்றது.
|
(32)
|
| 7759. | ‘"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும் தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
|