| உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்.
|
உந்து ஆர் துயரோடும் - மேலுந்தி எழுகின்ற மிக்க துயரத்தோடும்; உருத்து எரிவான் - சினந்து எரிபவன் ஆகிய (அதிகாயன் என்பவன்); அம்தார் இளவற்கு - அழகிய மாலை அணிந்த தம்பியாகிய (கும்பகருணன்) இறந்ததன் காரணமாக; அயர்வு எய்தி அழும் - மனத்துன்பம் அடைந்து அழுகின்ற; தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் - தம் தந்தையின் மனத் துன்பத்தைப் போக்கும் பொருட்டு; வந்தான் என - வந்துள்ளான் என; முன் சொல் வழங்குதியால் - முதற்சொல்லைச் சொல்லுவாய்.
|
அயர்வு - மனத்துன்பம், உருத்து - சினந்து, முன்சொல் - முதற்சொல், ஆல் - அசை.
|
(33)
|
| 7760. | ‘கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான், நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன் தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான், சூளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்;
|
கோளுற்றவன் - (துன்பம்) கொள்ளுதலைப் பொருந்தியவனாகி; நெஞ்சு சுடக் குழைவான் - மனம் கொதித்து வருந்துபவனாகிய இராவணனுடைய; நாள் உற்ற இருக்கையில் - நாளோலக்கமாகிய அவையில்; ஒரு தன் தாள் அற்று உருளக்கணை தள்ளிடுவான் - ஒப்பற்ற (இலக்குவன்) தன் கால்கள் அற்று உருளுமாறு அம்புகளைச் செலுத்துவதாக; யான் சூளுற்றதும் உண்டு - நான் (அதிகாயன்) சபதம் செய்ததும் உண்டு; அது சொல்லுதியால் - அதனைச் சொல்லுவாய்.
|
கோளுற்றவன் - துன்பத்தால் கொள்ளப்பட்டவன். குழைதல் - வருந்துதல், நாள் உற்ற இருக்கை - நாளோலக்கமாகிய அவை. சூளுறல் - சபதம் செய்தல்.
|
(34)
|
| 7761. | ‘தீது என்று அது சிந்தனை செய்திலெனால்; ஈது என்று அறம் மன் நெறி ஆம்’ என, ‘நீ தூது என்று இகழாது, உன சொல் வலியால், "போது" என்று, உடனே கொடு, போதுதியால். |