பக்கம் எண் :

84யுத்த காண்டம் 

அது தீது என்று சிந்தனை செய்திலெனால் - அவ்வாறு (செய்யக்
கருதிய  செயல்)  தீமை  பயப்பது  என்று சிந்தனை செய்ய மாட்டேன்;
ஈது என்று  மன் அறம்  நெறி  ஆம் என - இதுவே எப்பொழுதும்
மன்னர்களுக்கு உரிய அறவழி ஆகும் என்று; நீ தூது என்று இகழாது
-  நீ  தூதுவன்  தானே  என்று (அவ்விலக்குவன்) இகழாதவாறு;  உன
சொல்  வலியால்
- உன் சொல்லாற்றலால்;  உடனே  போது என்று
கொடு போதுதியால்
 -  உடனே  உடன்  வருவாய்  என்ற (அவனை
இங்கு) அழைத்துக் கொண்டு வருவாய்.

அது - இலக்குவனை முண்டமாக்க எண்ணிய எண்ணம்.

                                                  (35)

7762.‘செரு ஆசையினார், புகழ் தேடுறுவார்,
இருவோரையும், நீ வலி உற்று, "எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
வருவோரை எலாம் வருக!" என்னுதியால்.

செரு    ஆசையினார் - போரிடுதலில் விருப்பமுள்ளவர்கள்; புகழ்
தேடுறுவார்
 -  புகழைத் தேடுவோர்; இருவோரையும் - ஆகிய இராம
இலக்குவர்  இருவரையும்;  நீ வலி உற்று - நீ வலிய  (எதிரே சென்று)
பொருந்தி; எதிரே பொருவோர் நமனார்  பதி  புக்கு உறைவோர் -
(என்)   எதிரே  போரிட  வருபவர்கள்  இயமபுரியில்   புக்கு   வாழப்
போகிறவர்கள் (என்று கூறி); வருவோரை எலாம் வருக என்னுதியால்
- (போரிட) வருகின்றவர்களையெல்லாம் வருக என்று கூறிடுவாய்.

இருவோர்  -   இராமஇலக்குவர்.   வருவோரை  -   ஐ  சாரியை.
வினையாலணையும் பெயர். ஆல் - அசை.

                                                  (36)

7763.‘சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்,
"வந்தான்" என என் எதிரே, மதியோய்!
தந்தாய்எனின், யான் அலது, யார் தருவார்,
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்?

மதியோய்   -  நுண்  மதியுடையவனே;  எந்தை  சிந்தா  குலம்
திரித்திடுவான்
  -   என்  தந்தையின்  மனத்  துயரத்தை  மாற்றும்
பொருட்டு; வந்தான் என என் எதிரே தந்தாய் எனின் - (அதிகாயன்)
வந்துள்ளான்   என்று   சொல்லி   (இலக்குவனை)  எனக்கு  எதிரில்
(அழைத்து) வருவாய் என்றால்; உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் -
உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான) உயர்ந்த