பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 85

பொருள்களை  எல்லாம்;  யான்  அலது யார்  தருவார் - என்னைத்
தவிர யார் தருவார்கள்?

சிந்தா குலம்  -  மன  வருத்தம், திரித்தல் - மாற்றதல், உம்தாரிய -
உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான)

                                                  (37)

7764.

‘வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல், இமையோர் எதிரே,
கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும்
மாறே, ஒரு மன் என வைக்குவெனால்.

அவ்    இலக்குவன் என்ன வேறே விளம்பு - அந்த இலக்குவன்
என்று  வேறாகச்  சிறப்பித்துச்  சொல்லப்படுகிற;  ஏறே  வருமேல் -
ஆண்  சிங்கமே  (போருக்கு)  வருவானானால்; இமையோர் எதிரே -
தேவர்களுக்கு எதிரில்;  கூறே பல செய்து உயிர் கொண்டு - (அவன்
உடலைப்)  பல  துண்டுகளாகச் செய்து உயிரைக் கொண்டு;  உனையும்
மாறே  ஒரு  மன்  என  வைக்குவெனால்
 -  உன்னையும்  (செய்த
உதவிக்குக்) கைம்மாறாக ஒரு மன்னனாகச் செய்வேன்.

வேறே  - வேறாக  (சிறப்பித்து) ஏறு  -  ஆண்  சிங்கம்,  மாறு  -
கைம்மாறு.

                                                  (38)

7765.‘விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார்
பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால்.

விண்   நாடியர்  விஞ்சையர்  -  (நீ  இலக்குவனை  என்னிடம்
அழைத்து   வந்தால்) வான நாட்டவரும், வித்தியாதரரும் ஆகிய, அம்
சொலினார்
-  அழகிய சொற்களை  உடைய;  பெண்  ஆர் அமுது
அன்னவர்
  -  பெண்களில்  அருமையான அமிழ்தம் போன்றவர்கள்;
பெய்து   எவரும்  உண்ணாதன   -  ஊற்றித்தர  (வேறு)  எவரும்
உண்ணாதனவாகிய; கூர்  நறவு உண்ட குடம் - மிகுதியான கள்ளைக்
கொண்ட   குடங்கள்;  எண்ணாயிரம்   ஆயினும்   ஈகுவெனால் -
எண்ணாயிரம் வேண்டினும் தருவேன்.

உனக்கு    மிகுதியான கள் நிறைந்த குடங்கள் எண்ணாயிரமாயினும்
தருவேன்.  பெய்து  எவரும்  உண்ணாதன  -  மகளிர்  பொற்கலத்துத்
தேட்கடுப்பன்ன தேறலை வாக்குபு தரத்தர ஆடவர் உண்ணும் மரபு