குறித்து வந்தது. கூர் - மிகுதி உரிச்சொல். தசும்பு - குடம். தசும்பு துளங்கு இருக்கை என்றார் (பதிற். 42) பதிற்றுப்பத்தில்.
|
(39)
|
| 7766. | ‘உறைதந்தன செங் கதிரோன் உருவின் பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர் திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன் முறை தந்தன, தந்து முடிக்குவெனால்,
|
செங்கதிரோன் உருவின் உறை தந்தன பொறை தந்தன- சிவந்த கதிர்களை உடைய கதிரவன் நிறத்தோடு பொருந்தியனவும் பாரமுள்ளனவும்; இமையோர் திறை தந்தன - தேவர்களை திறைப் பொருளாகத் தந்தனவும்; தெய்வ நிதிக் கிழவன் - தெய்வ நிதிகளுக்கு எல்லாம் தலைவனான குபேரன்; முறை தந்தன - முறைமை பற்றித் தந்தன வுமான; காசு ஒளிர்பூண் - மணிகள் ஒளிவிடுகிற அணிகலன்களை; தந்து முடிக்குவெனால் - தருவேன் (தந்து முடிப்பேன்).
|
செல்வம் பல தருவேன். உறை தந்தன - பொருந்தியன. பொறை தந்தன - பாரம் உள்ளன, முறை தந்தன - முறைமை பற்றித் தந்தன. முறை - உடன்பிறந்த முறை என்க. தந்து முடிக்குவென் - முடி துணைவினை, (தன் பொருள் இழந்து முதல் வினையின் பொருளில் வருவது) தெய்வநிதிக் கிழவன் - குபேரன்.
|
(40)
|
| 7767. | ‘மாறா மத வாரிய, வண்டினொடும் பாறு ஆடு முகத்தன, பல் பகலும் தேறாதன, செங் கண வெங் களி மா நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால்,
|
வாரிய மதமாறா - வடிகிற மதப்பெருக்கு மாறாதனவும்; வண்டினொடும் பாறு ஆடுமுகத்தன - வண்டுகளோடு பருந்துகளும் பறந்து ஆடும் முன்புறத்தை உடையனவும்; பல் பகலும் தேறாதன - பலநாளும் (மதவெறியில் இருந்து) நீங்காதனவும்; செங்கண் வெங்களிமா - ஆகிய சிவந்த கண்களை உடைய கொடிய மதம் மிக்க யானைகள்; நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால் - நூறாயிரம் வேண்டுமானாலும் தருவேன்.
|
மண மதத்திற்காக வண்டுகளும், எதிர்ப்பட்டோரைக் கொல்லுதலால் கிடைக்கும் உணவுக்குப் பருந்துகளும் மத யானைக்கு முன் பறந்து வரும் என்க, செங்கண் - பண்புத்தொகை. களிமா - |