பக்கம் எண் :

860யுத்த காண்டம் 

முதல்வர்   எல்லாம்   வழிபட வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து
வழிபட
- (உலகினை இயக்கும்)  முதன்மையுடைய  கடவுளர்  யாவரும்
தம்  கண்ணின்     பார்வைபட்ட     அளவிலேயே     (அச்சத்தால்)
வெதும்பியவராகித்   தரைமீது  வீ்ழ்ந்து  வணங்க;  உலகம்  மூன்றும்
அடிப்பட  வந்தேனும்
 -  மூவுலக  ஆட்சியும் (தம்) அடிக்கீழ் வந்து
பொருந்திற்றாயினும்;  அழிபடை      தாங்கல்   ஆற்றும் ஆடவர்
யாண்டும் வெஃகாப்
- தோற்றுப் பின்னிடும்  (தமது)   சேனையினைப்
(பின்னிடாது)   பொறுத்துத்   தாங்கவல்ல    வீரர்கள்   எக்காலத்தும்
விரும்பாத;   பழிபடவந்த   வாழ்வை   யாவரே   நயக்கற்பாலார்
- பழியுண்டாகவந்த  (அடிமை) வாழ்வினை (மானமும் புகழும் நயக்கும்)
யார்தான் விரும்புகின்றவராவார்?
 

“பழியெனின்    உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறம்-182) எனும்
பாடலும்,   “பழிமலைந்தெய்திய வாக்கத்தின் சான்றோர், கழி நல்குரவே
தலை (குறள்657) என்ற குறளும் ஈண்டு ஒப்புக் காணத்தக்கன.
 

                                                 (164)
 

9098.

‘நீர் உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீரர், இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை; உறைய; 
                                  நின்னோடு

ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா!
 

நீர்    உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம் - நீர்
இருக்கும்   அளவும்  உயிர் தாங்கியுள்ள மீன் என்னும்படி அரக்கர்கள்
எல்லோரும்; வேர் உளதனையும்  வீவர்  இராவணனோடு; மீளார்-
வேர் (மூலகாரணம்)   உள்ள அளவும்  (போர் செய்து) இராவணனோடு
இறந்தொழிவர்   (அவர்களில்   எவரும்  உயிருடன்)  மீளமாட்டார்கள்;
ஐயா! ஊர் உளது; ஒருவன்  நின்றாய் நீ உறைய உளை - ஐயனே!
இலங்கையாகிய     ஊர்   மட்டும்   எஞ்சி   இருக்கும்.   ஒருவனாக
நின்றாயாகிய   நீ  (இங்கு)  தங்குதற்கு  உயிரோடு  உள்ளாய்;  அரசு
வீற்றிருக்க    நின்னோடு    நிற்பார் அரக்கர் ஆர் உளர்?
- நீ
அரசனாக      வீற்றிருக்க   நினக்குத்   துணையாக நிற்பார் அரக்கர்
இனத்தாரில் வேறு யார் உள்ளார்கள்?
 

                                                 (165)