ஆள்வாய் - (அத்தகைய தலைமை வாய்ந்த) நீயோ (இழிந்த) மனிதர்களுக்கு அடிமையாகி (அவர்களது உதவிபெற்று) நின் தமையன் இராவணனுக்குரிய அரச செல்வத்தை ஆளுதற்கு உள்ளாய்; இனி உனக்கு மானம் என்னோ? எங்களோடு அடங்கிற்று அன்றே - இனி உனக்குமானம் என்ன இருக்கின்றது? அப்பெருமை (போரில் இறந்தொழியும் நிலையினேம் ஆகிய) எங்களோடு அடங்கி ஒழிந்தது. | (167) | 9101. | ‘சொல்வித்தும், பழித்தும் நுங்கை மூக்கினைத் துணிவித்தோர் ஆர்? எல் வித்தும் படைக் கை உங்கள் தமையனை எங்களோடும் கொல்வித்தும், தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையை விழுமிது அன்றோ? | சொல்வித்தும், பழித்தும் நுங்கை மூக்கினைத் துணிவித்தோர் ஆர்? - (பிறர் வாயிலாகப்) பழியுரைகளைச் சொல்லச் செய்தும், (தாமே) பழித்தும், உன் தங்கையின் மூக்கினை அறுத்தோர் யார்? (இன்று நீ சரணடைந்திருக்கின்ற இம்மனிதரன்றோ); எல்வித்தும்படைக்கை உங்கள் தமையனை எங்களோடும் கொல்வித்தும் - (இம்மனிதர்களைக் கொண்டு) ஒளி விடும் படைகளை உடைய உங்கள் தமையனாகிய இராவணனை (ச்சுற்றத்தாராகிய) எங்களோடு கொல்வித்தும்; தோற்றுநின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் வெல்வித்தும் - (இதுவரையிலும் எமக்குத்) தோல்வியுற்று(ப்பின்னே) நின்ற கூற்றுவனாரது பரிவாரத்தையெல்லாம் (எங்களை) வெற்றி கொள்ளும்படி செய்தும்; வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ? - (அவற்றின் பயனாக நீ பெற்று) வாழ்கின்ற வாழ்க்கை வளத்தைவிட (ஒன்றுமில்லாத) வறுமை நிலையே மிகவும் சிறப்புடைய தல்லவா? | (168) | 9102. | ‘எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன், இராமன் அம்பால், புழுதியோ பாயல் ஆகப் புரண்ட நாள், புரண்டு மேல்வீழ்ந்து, |
|
|
|