| அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித் தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை?-விசயத் தோளாய்! |
‘விசயத்தோளாய்! - வெற்றித்திறம் வாய்ந்த தோள்களை உடையவனே! எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் - (வரிக்கோலம்) எழுதப்பெற்ற அழகினைக் கொண்ட திண்ணிய தோள்களையுடைய இராவணன்; இராமன் அம்பால் புழுதியேபாயல் ஆகப்புரண்டநாள் - இராமனது அம்பினால் (தாக்கப்பட்டுப்) புழுதிபடிந்த தரையினையே பாயலாகக்கொண்டு புரள்கின்ற நாளிலே; புரண்டு மேல் வீழ்ந்து அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ - (அவன் தம்பியாகிய நீ அப்புழுதியிற்) புரண்டு அவனது உடம்பின் மேல் வீழ்ந்து அழப்போகின்றாயோ? (அன்றி) நீயும் பகைவருடன்) சேர்ந்து (மகிழ்ச்சியால்) ஆரவாரிப்பாயோ? அவனை வாழ்த்தித் தொழுதியோ யாதோ, செய்யத்துணிந்தனை? - (தமையனது உயிர் கொண்டமைக்காக) அந்த இராமனை வாழ்த்தி வணங்கப் போகின்றாயா? (இவற்றுள்) எதனைச் செய்யத் துணிந்துள்ளாய்?’ |
(169) |
9103. | ‘ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர் வந்து எய்தும் மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான்- தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியோ? சரத்தினோடும் வானிடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கில்!’ என்றான். |
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் - ஊனுடைய உடம்பினின்றும் (உயிர்) நீங்கி, மருந்தினாலே உயிர் வந்து சேரப் பெற்றுப் பிழைத்த; மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? - மனிதர்கள் இலங்கை வேந்தனைக் கொல்லவல்லாரோ? நீயும் அன்னான் தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியோ? - நீயும் அவ்விராவணன் பெற்றுடைய செல்வத்தை நுகர்தற்குத் தகுதியுடையாய். ஆவாயோ? யான் பழி மறுக்கில் |