சரத்தினோடும் வானிடைப் புகுதி அன்றே’ என்றான் - (சிறியதந்தையாகிய உன்னைக் கொல்லுதல்) பழி என்பதனை மறுத்து நின்னை (அம்பினாற்) கொல்லப் புகின் நீ அந்த அம்பினோடும் வானுலகத்தை அடைவாய் அல்லையோ? என்று கூறினான். |
தனது யாகத்தை அழிவித்தும், தனது குலத்தைக் காட்டிக்கொடுத்தும் இலங்கை அழிவிற்குத்தானுமொரு காரணமாயிருக்கும் வீடணன் போர் முகத்தில் பகைவனோடு நின்றுமுரண்பட்ட நிலையிலும் தந்தை முறையாகும் அவனைக் கொல்லப் பழிபார்க்கும் இந்திரசித்தனின் பண்பு நிலை பாராட்டுதற் குரியது. |
(170) |
வீடணன் மறுமொழி |
9104. | அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி, ‘வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய! இவ் உரை கேட்டி!’ என்னா, இனையன விளம்பலுற்றான்: |
அவ்வுரை அமையக்கேட்ட வீடணன் - (இந்திரசித்து கூறிய) அந்த வார்த்தையினை (மனம்) பொருந்தக்கேட்ட வீடணன்; அலங்கல் மோலி செவ்விதின் துளக்கி - மாலையணிந்த முடியினை நன்கு அசைத்து; மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி - (தன்முகத்தே) புன் சிரிப்பு வெளிப்படச்செய்து; ‘ஐய! வெவ்விது பாவம் சாலத்தருமமே விழுமிது - ‘ஐயனே! பாவம் கொடுமையுடையது அறமே மிகவும் சிறந்தது; ‘இவ்வுரை கேட்டி!’ என்னா இனையன விளம்பலுற்றான் - (யான் கூறும்) ‘இம்மொழியினைக் கேட்பாயாக’ என்று (பின்வரும்) இம்மொழிகளைக் கூறத் தொடங்கினான். |
(171) |
9105. | ‘அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும் மறம் துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்; |