பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 865

துறந்திலேன் மெய்ம்மை, எய்தும் பொய்ம்மையே 
                                துறப்பது அல்லால்;
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன், பிழைத்த 
                                         போதே.
 

அறம்  துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும்
- அறமே  துணையாவது  (அவ் அறத்தை) அன்றி(க்கடப்பதற்கு) அரிய
நரகத்தினைப்   பொருந்தும்படி   தரும்;   மறம்துணையாக,  மாயாப்
பழியொடும் வாழ  மாட்டேன்
 - பாவத்தினைத்துணையாகக்கொண்டு
நீங்காத  பழியோடும்  உயிர்  வாழ மாட்டேன்; எய்தும் பொய்மையே
துறப்பது அல்லால்  மெய்மை  துறந்திலேன்
 -  (இடையில்)  வந்து
அடையும்   பொய்ம்மையினை   விட்டு  ஒழிப்பதல்லது மெய்மையினை
விட்டு  நீங்கினேன்  அல்லேன்; இலங்கைவேந்தன் பிழைத்த போதே
அவன்  பின்  பிறந்திலேன்
 -  இலங்கை  வேந்தனாகிய இராவணன்
(பிறனில்   விழைதலாகிய)  பிழையினைச் செய்த பொழுதே அவன் பின்
பிறவாதவன் ஆயினேன்.
 

                                                 (172)
 

9106.

‘உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; 
                                 வலியால் ஒன்றும்

கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே?
 

நறவம்   உண்டிலென்;   பொய்மை உரைத்திலென்; வலியால்
ஒன்றும்    கொண்டிலென்
 -    (யான்)  மதுவினை  உண்டிலேன்;
பொய்ம்மொழி   உரைத்திலேன்;     (பிறர்க்குரிய     பொருள்களுள்)
ஒன்றையும்     வலிதிற்கவர்ந்து     கொண்டிலேன்;    மாய வஞ்சம்
குறித்திலென்; யாரும் குற்றம்  கண்டிலர்  என்பால்
  - (எவர்க்கும்)
மாயத்தினாற் செய்யும் வஞ்சனைச்   செயலை(மனத்தாற்)  குறித்திலேன்.
என்பால்  யாரும்   குற்றத்தினைக்    கண்டிலர்;  நீயிரும்  காண்டிர்
அன்றே?     உண்டே?  
-    நீங்களும்      என்னை    நன்கு
அறிந்திருக்கிறீர்களல்லவா?  என்பால்   ஏதேனும்  குற்றம்  உளதோ?;
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே? -