பக்கம் எண் :

866யுத்த காண்டம் 

கற்புடைய  பெண்டிரிடத்து  முறைதவறி  நடந்தவரை  (யான்)  விட்டு
நீங்கியது தவறுடைய செயலாகுமோ?
 

                                                 (173)
 

9107.

‘“மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி கற்பினில் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது” என்று உரைப்ப, நுன் தாதை சீறி,
“போ!” எனப் போந்தேன்; இன்று நரகதில் 
                                பொருந்துவேனோ?

 

மூவகை உலகும் ஏத்தும் முதலவன் - ‘மூன்று வகை உலகங்களும்
துதித்துப்  போற்றும் முதல்வனும்; எவர்க்கும் மூத்ததேவர்தம் தேவன்
தேவி 
-   எல்லார்க்கும்   முன்னே  தோன்றி மூத்ததேவாதி தேவனும்
ஆகிய   திருமாலின்      மனைவி;    கற்பினில்    சிறந்துளாளை’
நோவனசெய்தல்   தீது
 -  கற்பினில் சிறந்துள்ளவளாகிய பிராட்டியை
மனம்   நொந்து  வருந்தத்தக்கன  செய்தல்  பாவம்;  என்று உரைப்ப
நுன்தாதை சீறிப் “போ”! எனப்போந்தேன்
- என்று (யான்) சொல்ல,
உன்தந்தை  (என்னை)    வெகுண்டு,  ‘ஓடிப்போ’ என்று கூற (அவனை
விட்டு) வந்தேன்;  இன்று நரகதில் பொருந்து வேனோ - இப்பொழுது
நரகத்திற் புகுவேனோ?
 

                                                 (174)
 

9108. 

‘வெம்மையின், தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண்க; துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு
                                 அறத்தைத் தேறும்

எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக.
 

வெம்மையின்  தருமம் நோக்காவேட்டதே  வேட்டு  வீயும் -
கொடுமைகாரணமாக  அறத்தை நோக்காது (மனம்)  விரும்பியதனையே
விரும்பிக்கெட்டொழியும்;   உம்மையே  புகழும் பூண்க  துறக்கமும்
உமக்கே  ஆக
 -  உங்களையே  புகழும்  (அணியாகப்  பொருந்துக.
துறக்கவுலக   இன்பமும்   உங்களுக்கே   உரியதாகுக;  செம்மையில்
பொருந்தி    மேலோர்    ஒழுக்கினோடு  அறத்தைத் தேறும்
-
செவ்விதாகிய   பண்பினைப்     பொருந்தி      மேன்மையுடையோர்
கொண்டொழுகிய ஒழுக்கத்தோடு அறத்தினைத் தெளிந்