கற்புடைய  பெண்டிரிடத்து  முறைதவறி  நடந்தவரை  (யான்)  விட்டு       நீங்கியது தவறுடைய செயலாகுமோ?    | 
                                                      (173)    | 
| 9107. | ‘“மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன், தேவி கற்பினில் சிறந்துளாளை நோவன செய்தல் தீது” என்று உரைப்ப, நுன் தாதை சீறி, “போ!” எனப் போந்தேன்; இன்று நரகதில்                                             பொருந்துவேனோ?    | 
மூவகை      உலகும் ஏத்தும் முதலவன் - ‘மூன்று வகை உலகங்களும்       துதித்துப்  போற்றும் முதல்வனும்;       எவர்க்கும் மூத்ததேவர்தம் தேவன்       தேவி       -   எல்லார்க்கும்   முன்னே  தோன்றி மூத்ததேவாதி தேவனும்       ஆகிய        திருமாலின்      மனைவி;    கற்பினில்    சிறந்துளாளை’       நோவனசெய்தல்        தீது  -  கற்பினில் சிறந்துள்ளவளாகிய பிராட்டியை       மனம்        நொந்து  வருந்தத்தக்கன  செய்தல்  பாவம்;       என்று உரைப்ப       நுன்தாதை சீறிப் “போ”! எனப்போந்தேன் - என்று (யான்) சொல்ல,       உன்தந்தை  (என்னை)         வெகுண்டு,  ‘ஓடிப்போ’ என்று கூற (அவனை       விட்டு)      வந்தேன்;  இன்று நரகதில் பொருந்து வேனோ -      இப்பொழுது       நரகத்திற் புகுவேனோ?    | 
                                                      (174)    | 
| 9108.  | ‘வெம்மையின், தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு, வீயும் உம்மையே புகழும் பூண்க; துறக்கமும் உமக்கே ஆக; செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு                                             அறத்தைத் தேறும் எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக.    | 
வெம்மையின்       தருமம் நோக்காவேட்டதே  வேட்டு  வீயும்      -       கொடுமைகாரணமாக  அறத்தை நோக்காது (மனம்)       விரும்பியதனையே       விரும்பிக்கெட்டொழியும்;        உம்மையே  புகழும் பூண்க  துறக்கமும்       உமக்கே  ஆக  -  உங்களையே  புகழும்  (அணியாகப்  பொருந்துக.       துறக்கவுலக   இன்பமும்   உங்களுக்கே   உரியதாகுக;       செம்மையில்       பொருந்தி    மேலோர்         ஒழுக்கினோடு  அறத்தைத் தேறும் -       செவ்விதாகிய        பண்பினைப்     பொருந்தி      மேன்மையுடையோர்       கொண்டொழுகிய ஒழுக்கத்தோடு அறத்தினைத் தெளிந்  |