பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 867

தொழுகும்;   எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக -
எங்களையே   பழிவந்து  பொருந்துக.  நரகத்துன்பமும்  எங்களுக்கே
அமைவதாக;
 

                                                 (175)
 

9109.

‘”அறத்தினைப் பாவம் வெல்லாது” என்னும் அது
                                 அறிந்து, “ஞானத்
திறத்தினும் உறும்” என்று எண்ணி, தேவர்க்கும்
                              தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக; பழியொடும் புணர்க; போகச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க’ என்றனன், சீற்றம் தீர்ந்தான்.
 

“அறத்தினைப்   பாவம் வெல்லாது” என்னும் அது அறிந்து -
“அறத்தினைப்   பாவம்   வெல்லாது”   என்று   ஆன்றோர்  கூறும்
அவ்வுண்மையினை  அறிந்து;  “ஞானத்திறத்தினும்  உறும்”  என்று
எண்ணி தேவர்க்கும்  தேவைச்  சேர்ந்தேன்
 -  (அவ்  அறத்தின்
மூர்த்தியை    அடைதலால்) ஞானத்திறத்தாலும் மிக்க பயன்பொருந்தும்
என்று     கருதித்    தேவர்க்கும்    தேவனாகிய    இராமபிரானைச்
சரணடைந்தேன்; புறத்தினில் புகழே ஆக  பழியொடும்  புணர்க -
(எனக்குப்) புறத்தே புகழே உண்டாகுக. அன்றிப் பழியொடு பொருந்துக;
போகச்  சிறப்பினிப்  பெறுக! தீர்க என்றனன் சீற்றம்  தீர்ந்தான்
- (பேதைமை தீர்ந்த) ஞானச் சிறப்பினை (யான்) பெறுக அன்றிப் பெறா
தொழிக   (அது  பற்றிக் கவலை இல்லை) என்று கூறினான் சினமாகிய
குற்றத்தினை வி்ட்டொழித்தவனாகிய வீடணன்.
 

                                                 (176)
 

9110.

‘பெறும் சிறப்பு எல்லாம் என் கைப் பிறை முகப்
                                    பகழி பெற்றால்,
இறும் சிறப்பு அல்லால், அப் பால் எங்கு இனிப்
                                  போவது?’ என்னா,
தெறுஞ் சிறைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து,
                                      செம் பொன்

உறும் சுடர்க் கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் 
                                       வெய்யோன்.

 

உருமின் வெய்யோன்   -    இடியினை    யொத்த   வெம்மை
உடையனாகிய இந்திரசித்து; பெறும் சிறப்பு எல்லாம் என் கைப்