பக்கம் எண் :

868யுத்த காண்டம் 

பிறைமுகப்     பகழி   பெற்றால்  -   (வீடணனை  நோக்கி)  ‘நீ
பெறக்கருதியுள்ள   சிறப்புக்கள்  யாவும்   என்கையிலுள்ள  பிறைமுக
அம்பு ஒன்றினைப்  பெற்றால்; இறும் சிறப்பு அல்லால் எங்கு இனிப்
போவது?’   என்னா
  -   அழிந்தொழியும்  சிறப்பாய்  முடிவதன்றி
(அழியாது)   இனி   அப்பால்  செல்வது  எங்கே?  என்று  சொல்லி;
தெறுஞ்சிரைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து - (பாம்பினை)
அழிக்கும்   சிறகினை  உடைய கருடனை ஒத்ததாகிய ஓர் அம்பினைத்
தெரிந்தெடுத்து;    செம்பொன்    உறும் சுடர்  கழுத்தை நோக்கி
நூக்கினான் 
-  செம்பொன் அணிகள் பொருந்திய ஒளியினை உடைய
(வீடணனது) கழுத்தை நோக்கிச் செலுத்தினான்.
 

                                                 (177)
 

9111.

அக் கணை அசனி என்ன, அன்று என, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி,
‘இக் கணத்து இற்றான், இற்றான்’ என்கின்ற
                                  இமையோர்காண,

கைக் கணை ஒன்றால், வள்ளல், அக் கணை கண்டம்
                                        கண்டான்.

 

அக்கணை   அசனி  என்ன அன்று என - (இந்திரசித்து ஏவிய)
அந்த   அம்பானது,  இடி   எனவும்,  தீ  எனவும்;  ஆலம்  உண்ட
முக்கணான்சூலம்  என்ன
-  நஞ்சினை  உண்ட  மூன்று  கண்களை
உடைய  சிவபெருமானுடைய  சூலப்படை  எனவும்; முடுகிய முடிவை
நோக்கி
   -    விரைந்து    செல்லுதலால்    நேரும்   முடிவினை
எண்ணிப்பார்த்து;   ‘இக்கணத்து இற்றான்,  இற்றான்’   என்கின்ற
இமையோர் காண
 - ‘(வீடணன்) இப்பொழுதே இறந்தான் இறந்தான்’
எனத்  தம் முட்  கூறுகின்ற  தேவர்கள் காண; வள்ளல் கைக்கணை
ஒன்றால்  அக்கணை  கண்டம்   கண்டான்
 -  வள்ளல்  தன்மை
உடையோனாகிய  இலக்குவன், தன்கையிற் கொண்ட அம்பு ஒன்றினால்
(இந்திரசித்துவிட்ட) அந்த அம்பினைத் துண்டித்து முறித்தான்.
 

                                                 (178)
 

9112.

கோல் ஒன்ற துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது 
                                            என்ன,