பக்கம் எண் :

870யுத்த காண்டம் 

எல்லாவற்றையும்   (அவற்றின்   உயிர்த்)  துடிப்பு  நீங்கக்  கொன்று
வீழ்த்தினான் வீடணன்.
 

                                                 (180)
 

9114.

அழிந்த தேர்மீது நின்றான், ஆயிர கோடி அம்பு
பொழிந்து, அவன் தோளின்மேலும், இலக்குவன் 
                            புயத்தின்மேலும்

ஒழிந்தவர் உரத்தின்மேலும், உதிர நீர் வாரி ஓதம்
அழிந்து இழிந்து ஓட, நோக்கி, அண்டமும் இரிய 
                                ஆர்த்தான்.

 

அழிந்த    தேர்  மீது நின்றான் அவன் தோளின் மேலும் -
அழிவுற்ற  (அந்தத்)     தேரின்  மேல்  நின்றவனாகிய  இந்திரசித்து
அவ்வீடணன்    தோளின்   மேலும் இலக்குவன் புயத்தின் மேலும்
ஒழிந்தவர் உரத்தின் மேலும் 
 -  இலக்குவன்  தோளின்  மேலும்
எஞ்சியுள்ள        வானரவீரர்     மார்பின்  மேலும்; ஆயிரகோடி
அம்புபொழிந்து  உதிர நீர்  வாரி    ஓதம் 
  -  ஆயிர  கோடி
அளவினவாகிய அம்புகளைச் சொரிந்து குருதி நீராகிய பெருவெள்ளம்;
அழிந்து  இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான்  -
வரம்பழிந்து  இழிந்து ஓடக்கண்டு அண்டமும்   நிலைகெட்டு ஓடும்படி
பேராரவாரம் செய்தான்.
 

                                                 (181)
 

                            இந்திரசித்து இராவணனிடம் போதல்
 

9115.

ஆர்த்தவன், அனைய போழ்தின், ‘அழிவு இலாத் 
                            தேர் கொண்டு
அன்றிப்
போர்த் தொழில் புரியலாகாது’ என்பது ஓர் பொருளை 
                                          உன்னி,

பார்த்தவர் இமையாமுன்னம், ‘விசும்பிடைப் படர்ந்தான்’ 
                                         என்னும்

வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு 
                                         புக்கான்.

 

ஆர்த்தவன்;  அனையபோழ்தின் ‘அழிவு இலாத்தேர்கொண்டு
அன்றி
  - (அங்ஙனம்) ஆரவாரித்தவனாகிய இந்திரசித்து, அப்பொழுது
அழிவுறாத  தேரினைக் கொண்டல்லாமல்;  போர்த்தொழில்  புரியல்
ஆகாது’ என்பது ஓர்  பொருளை உன்னி
- போர்த்தொழில் புரிதல்
முடியாது என்பதொரு பொருளை