பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 871

(மனத்தில்)    எண்ணி; பார்த்தவர் இமையாமுன்னம் ‘விசும்பிடைப்
படர்ந்தான்’ என்னும்
 - தன்னை நோக்கியவர்கள் ‘கண் இமையினை
மூடித்திறப்பதற்குள்  ஆகாயத்தில்   மறைந்து சென்றான் (இந்திரசித்து)’
என்னும்; வார்த்தையை   நிறுத்திப்    போனான்    இராவணன்
மருங்குபுக்கான்
- சொல்லினை (ப்போர்க்களத்தில்) நிலைக்கச் செய்து
(மறைந்து) சென்றவனாகி இராவணன் பக்கத்திற் புக்கான்.
 

ஆர்த்தவன்     - இந்திரசித்து. ‘இமைப்பதன் முன்னம் விசும்பிடை
மறைந்தான்’   என்று  அனைவரும்  பேசிக்  கொள்ளும்படி மறைந்து
போனான்  என்பதாம்.  ‘அழிவில்லாத  தேர்  கொண்டாலன்றி  போர்
வெல்லலாகாதென’   எண்ணியவனாய்  இந்திரசித்து இமைப்பதன் முன்
வானில் மறைந்து சென்றான் என்றவாறு.
 

                                                 (182)