| இந்திரசித்து வதைப் படலம் | 873 |
| புண்ணுடை யாக்கைச் செந்நீர், இழிதர, புக்கு நின்ற எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான். | ‘விண்ணிடைக் கரந்தான்’ என்பார்; ’வஞ்சனை விளைக்கும்’ என்பார் - ‘இந்திரசித்து விண்ணில் மறைந்தான்’ என்பாரும், ‘இனி வஞ்சனைச் செயலைச் செய்வான் என்பாருமாய்; கண்ணிடைக் கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும் காலை - வானரர் கண் கலங்கி (விண்ணை) நோக்கி, ஐயத்தால் வருந்திக் கொண்டிருக்கும்போது; புண்ணுடை யாக்கைச் செந்நீர் இழிதரப்புக்கு நின்ற- (விண்ணிடை மறைந்து நில்லாமல்) புண்ணுடைய தன் உடம்பில் இரத்தம் சோர, இராவணன் இல்லம் புகுந்து நின்ற; எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான் - மதிப்புடைய மகனைப் பார்த்து இராவணன் இத்தகைய வார்த்தைகளைச் சொன்னான். | (1) | 9117. | ‘தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல் அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப் படம் குறை அரவம் ஒத்தாய், உற்றது பகர்தி’ என்றான். | தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில் - நீ தொடங்கிய வேள்வி முற்றுப் பெறாத தன்மையை; நின் தோள் மேல் அடங்கிய அம்பே என்னை அறிவித்தது - நின் தோள் மேல்தைத்துள்ள அம்பே எனக்கு அறிவித்தது; அழிவு இல் யாக்கை நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை - அழிவு இல்லாத உடம்பு (முதுமையால்) நடுங்கினவன் போல மிகவும் தளர்ந்து; கலுழன் நண்ணப் படங்குறை அரவம் ஒத்தாய் - கருடன் நெருங்கியதால் படம் ஒடுங்கின பாம்பு போன்றோய்; உற்றது பகர்தி என்றான் - நிகழ்ந்ததைச் சொல் என்று இராவணன் வினவினான். | (2) | 9118. | ‘சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி, வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி, |
|
|
|