9119. | ‘நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் படை நின்றானை வலம் செய்து போயிற்று என்றால், மற்று இனி வலியது உண்டோ? குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்; சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே. |
நெடிய மால் படை நிலம் செய்து விசும்பும் செய்து, நின்றானை - யான் எய்த நெடிய திருமாலின் படை நிலம் முழுதும் பரவியதோடு விண் முழுதும் பரவி என் எதிர் நின்ற இலக்குவனை; வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ? - வலம் செய்து கொண்டு (அவனை ஒன்றும் செய்யாது) போவது என்றால், அப்படையினும் வலியதொரு படை நம்மிடம் உளதோ? குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக்கொண்டாய் - நம் அரக்கர் குலம் செய்த பாவத்தினாலே நீ கொடுமையான பகையைத் தேடிக்கொண்டாய்; இலக்குவன் சலம் செயின் தானே உலகம் மூன்றும் முடிப்பன் - இலக்குவன் |