பக்கம் எண் :

878யுத்த காண்டம் 

தருவாய்     என்றோ,    எண்ணி   அன்று; என்னையே நோக்கியான்
இந்நெடும்    பகை     தேடிக்கொண்டேன்   -   என்   வலிமையை
எண்ணியேயான் இந்த நெடிய பகையைத் தேடிக்கொண்டேன்.
 

                                                   (8)
 

9124.

‘பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம்
                               பெயர, பேராக்
காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது 
                                    அல்லால்,

சீதையை விடுவது உண்டோ, இருபது திண் தோள் 
                                   உண்டால்?

 

பிள்ளாய்!  பேதைமை  உரைத்தாய்  -  பிள்ளாய்!  அறிவோடு
பொருந்தாத  சொற்களைச்   சொன்னாய்;   உலகு   எலாம்  பெயர
பேராக்காதை   என்புகழினோடு  நிலைபெற
- உலகங்கள் எல்லாம்
நிலை பெயரவும் அழியாத கதை எனது புகழினோடு நிலை பெறுமாறும்;
அமரர் காண மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது
அல்லால்
 -  அதனைத்  தேவர்கள் காணுமாறும், நீர்மேல் எழுகின்ற
குமிழி  போன்ற  நிலையில்லாத  உடம்பை விடுவது அல்லது; இருபது
திண் தோள் உண்டால் சீதையை விடுவது  உண்டோ?
 - இருபது
திண்ணிய தோள்கள் எனக்கு இருக்கச் சீதையை விடுவதும் உண்டோ?
 

                                                   (9)
 

9125.

‘வென்றிலென் என்ற போதும், வேதம் உள்ளளவும் யானும்
நின்றுனென் அன்றோ,மற்று அவ் இராமன் பேர் 
                                    நிற்கும்ஆயின்?

பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து 
                                         அன்றோ?

இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ?
 

வென்றிலன் என்ற போதும் - யான் வெற்றி பெறவில்லையாயினும்;
மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின் - (வெற்றி பெற்ற) அந்த
இராமன் பேர்  நிற்குமாயின்; யானும் வேதம் உள்ளளவும் நின்றுளன்
அன்றோ 
 - (அவனால்)  வெல்லப் பெற்ற) யானும் வேதம் இருக்கின்ற
காலம் வரையில் நிலைபெற்றுள்ளேன்