தருவாய் என்றோ, எண்ணி அன்று; என்னையே நோக்கியான் இந்நெடும் பகை தேடிக்கொண்டேன் - என் வலிமையை எண்ணியேயான் இந்த நெடிய பகையைத் தேடிக்கொண்டேன். |
(8) |
9124. | ‘பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயர, பேராக் காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண, மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால், சீதையை விடுவது உண்டோ, இருபது திண் தோள் உண்டால்? |
பிள்ளாய்! பேதைமை உரைத்தாய் - பிள்ளாய்! அறிவோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாய்; உலகு எலாம் பெயர பேராக்காதை என்புகழினோடு நிலைபெற - உலகங்கள் எல்லாம் நிலை பெயரவும் அழியாத கதை எனது புகழினோடு நிலை பெறுமாறும்; அமரர் காண மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் - அதனைத் தேவர்கள் காணுமாறும், நீர்மேல் எழுகின்ற குமிழி போன்ற நிலையில்லாத உடம்பை விடுவது அல்லது; இருபது திண் தோள் உண்டால் சீதையை விடுவது உண்டோ? - இருபது திண்ணிய தோள்கள் எனக்கு இருக்கச் சீதையை விடுவதும் உண்டோ? |
(9) |
9125. | ‘வென்றிலென் என்ற போதும், வேதம் உள்ளளவும் யானும் நின்றுனென் அன்றோ,மற்று அவ் இராமன் பேர் நிற்கும்ஆயின்? பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ? இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ? |
வென்றிலன் என்ற போதும் - யான் வெற்றி பெறவில்லையாயினும்; மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின் - (வெற்றி பெற்ற) அந்த இராமன் பேர் நிற்குமாயின்; யானும் வேதம் உள்ளளவும் நின்றுளன் அன்றோ - (அவனால்) வெல்லப் பெற்ற) யானும் வேதம் இருக்கின்ற காலம் வரையில் நிலைபெற்றுள்ளேன் |