| இந்திரசித்து வதைப் படலம் | 881 |
இராவணனைத் தடுத்து இந்திரசித்துப் போர்க்குச் செல்லுதல் | 9128. | எழுந்தவன் தன்னை நோக்கி, இணை அடி இறைஞ்சி, ‘எந்தாய்! ஒழிந்தருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான் போய்க் கழிந்தனென் என்ற பின்னர், நல்லவா காண்டி’ என்னா மொழிந்து, தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான். | எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி - அவ்வாறு போர்க்கு எழுந்த இராவணனைப் பார்த்து அவனுடைய இரண்டு அடிகளையும் வணங்கி,; ‘எந்தாய்! சீற்றம் ஒழிந்தருள், சொன்ன உறுதியைப் பொறுத்தி - ‘என் தந்தையே! கோபத்தை விடுவாயாக! யான் சொன்ன உறுதிச்சொற்களைப் பற்றி என்மேல் வெகுளாது பொறுத்துக் கொள்வாயாக; யான் போய்க் கழிந்தனென் என்ற பின்னர் ‘நல்லவா காண்டி’ என்னா - யான் போர்க்குச் சென்று இறந்தேன் என்று கேள்விப்பட்ட பின்பு என் சொற்களை ‘நல்லனவாகக் காணுவாய்’ என்று கூறிவிட்டு; மொழிந்து, தன் தெய்வத் தேர் மேல் முடியலுற்றான் ஏறினான் - தனது தெய்வத்தன்மையுடைய தேரின்மேல் இறக்கும் உறுதி கொண்டவனாய் ஏறினான் (இந்திரசித்து). | (13) | 9129. | படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும், தன்பால் அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன, தேர்மேல் ஆக்கி, கொடைத் தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன், கொடியோன் தன்னைக் கடைக்கணால் நோக்கி நோக்கி, இரு கண் நீர் கலுழப் போனான். | படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் - படைக்கலங்களைச் செலுத்தக் கூடிய மறை பொருளாகத் தனக்குத் தெரிந்த வித்தைகளும் மற்றும் போர்த்துறைக்குரிய வகையான ஆயுதங்களையும்; தன்பால் அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன |
|
|
|