பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 883

‘மன்னனைக்காமின்’   என்றதனால் மன்னனுக்கு ஆபத்து என்பதும்
‘யாதும்    கலங்கலிர்’ என்றதனால், அனைவரும் கலக்கமடைந்துள்ளன
ரென்பதும்  பெறப்பட்டது. ‘மனிசரைக் கடப்பென்’ என்பவன் பின் ஏன்
மன்னனைக்    காமின்  என்றான்? தன் வீ்ழ்ச்சி தவிர்க்க முடியாததும்,
உறுதியானதுமென இந்திரசித்து நினைத்ததினால் என்க.
 

                                                  (15)
 

9131.

வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவினை
                              நோக்கிக் தம் வாய்
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார் 
                                    வெருவலுற்றுக்
கணங் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் 
                                         என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து, 
                                அரிதின் போனான்,
 

கணங்குழை மகளிர் ஈண்டி - திரண்ட குழைகளை உடைய மகளிர்
நெருங்கி   வந்து; வணங்குவார்,   வாழ்த்துவார்,   தன் வடிவினை
நோக்கி   
-     வணங்குகின்றவர்களும்,     வாழ்த்துகின்றவர்களும்
இந்திரசித்தின்    வடிவினைப்    பார்த்து;  தம்  வாய் உணங்குவார்,
உயிர்ப்பார் உள்ளம் உருகுவார்
-  தம்முடைய  வாய்  உலர்பவரும்,
பெருமூச்செறிவாரும் உள்ளம் உருகுகின்றவரும்   ஆகி;  வெருவலுற்று
இரைத்தவர் கடைக்கண்   என்னும்
  -  அஞ்சி    அரற்றினவர் தம்
கடைக்கண் நோக்கு     என்கின்ற; அணங்குடை  நெடுவேல்  பாயும்
அமர் கடந்து அரிதின் போனான்
 -  வருத்தும் தன்மை பொருந்திய
நீண்ட வேல் பாய்கின்ற    போரினை  அரிதாகக்  கடந்து இந்திரசித்து
(இலக்குவனோடு செய்யும் போருக்குப்) போனான்.
 

                                                  (16)
 

9132.

ஏயினன் இன்னன் ஆக, இலக்குவன், எடுத்த வில்லான்,
சேய் இரு விசும்பை நோக்கி, ‘வீடண! தீயோன் அப் பால்
போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் 
                                ஒன்றும்’ என்பான்,

ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான்.