9133. | குன்று இடை நெரிதர, வடவரையின் குவடு உருள்குவது என முடுகுதொறும், பொன் திணி கொடியினது, இடி உருமின் அதிர் குரல் முரல்வது, புனை மணியின் மின் திரள் சுடரது, கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது எனச் சென்றது, திசை திசை உலகு இரிய,- திரி புவனமும் உறு தனி இரதம். |