போர்த் தொழில் புரிதலும், உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால்.
நிருதர் தம் அனிகம் ஆர்த்தது உடன் அமரரும் வெருவினர் - அரக்கர் சேனை ஆரவாரித்தது உடனே தேவர்களும் அஞ்சினர்; கவிகுலமும் வெருவலோடு அலம் வரலால் வேர்த்தது - வானர சேனையும் அஞ்சுதலோடு துன்புறுதலால் வேர்த்தது; அடு தொழிலோன் விடுகணை சிதறினன் - கொலைத் தொழிலை உடைய இந்திரசித்து விடுதற்குரிய அம்புகளை வில்லில் கோத்து விடுத்தான்; தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடுந் திசை செவிடு எறிதர - தூயவனான இலக்குவனும் அந்த இந்திரசித்தின் எதிரே விரைந்து சென்று நெடிய திசைகளெல்லாம் செவிடுபடும் படி (ஆரவாரித்து); விசை கெழுதிண் போர்த்தொழில் புரிதலும் - விரைவு பொருந்திய திண்ணிய போர்த்தொழிலைச் செய்தலும்; உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் - உலகில் கடுமையான புகையோடு கொழுந்து விட்டு எரியும் தழல் நிரம்பியது.
(20)
9136.
வீடணன் அமலனை, ‘விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல், சூடலை, துறு மலர் வாகை’ எனத் தொழுதனன்; அவ் அளவில் அழகனும் அக் கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட, நிலவரையில் சேடனும் வெருவுற, உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால்.
வீடணன் அமலனை - வீடணன், தூயவனாகிய இலக்குவனை நோக்கி; விறல் கெழுபோர் விடலையை இனி இடை விடல் உளதேல் - “வெற்றி பொருந்திய போராற்றல் மிக்கவனாகிய இந்திரசித்தனை இனி போரின் இடையே கொல்லாமல் (முன் போல் மறைய) விடுதல் உண்டாகுமாயின்; துறுமலர் வாகை சூடலை எனத் தொழுதனன் - நீ நெருங்கிய மலர்களை உடைய வாகை மாலையை (வெற்றியை) சூட மாட்டாய்” எனக் கூறித்