| இந்திரசித்து வதைப் படலம் | 887 |
தொழுதானாக; அழகனும் அவ்வளவில் அக்கோடு அணை வரி சிலை - அழகனாகிய இலக்குவனும் அவ்வளவில் அந்தப் பெரு முழக்கத்தையுடைய கட்டமைந்த வில்லில்; உலகு உலைய குலவரை விதிர்பட நிலவரையில் சேடனும் வெருவுற - உலகெல்லாம் வருந்துமாறும், பெரும் மலைகள் பிதிர்பட்டு உதிரவும், நிலத்தின் அடியிலுள்ள ஆதிசேடனும் அஞ்சுதல் செய்யவும்; உரும் உறழ் திண் தெறுகணை முறை முறை சிதறினனால் - இடியை ஒத்த திண்ணிய அழித்தல் தன்மை பொருந்திய அம்புகளை முறை முறையாகக் கோத்து எய்தான். | (21) | 9137. | ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட, இவன் விட, அத் தீயினும் எரிவன உயிர் பருக, சிதறின கவிகளொடு இன நிருதர், போயின போயின திசை நிறையப் புரள்பவர் முடிவு இலர்; பொரு திறலோர் ஏயின, ஒருவரை ஒருவர் குறித்து, எரி கணை, இரு மழை பொழிவனபோல். | அயில் முகவாய் அடுகணை ஆயிர அளவின அவன் விட இவன் விட - அவ்வமையம் அனல் சிந்தும் முனையை உடையவாய்க் கொல்லுகின்ற அம்புகளை அவ்விந்திரசித்து விடவும், அவனுக்கு எதிரே இலக்குவன் விடவும்; அத்தீயினும் எரிவன உயிர் பருக, சிதறின கவிகளொடு இன நிருதர் - அந்தத் தீயினும் மிக்கு எரிவனவாய் உயிரைப் பருகுதலால், சிதறுண்ட வானரங்களோடு கூட்டமான அரக்கர்கள் (ஆற்றாமல்) போயின போயின திசை நிறையப் புரள்பவர் முடிவு இலர் - சென்ற சென்ற திசைகள் நிறையுமாறு புரள்கின்றவர்கள் எண்ணற்றவராயினர்; பொருதிறலோர் எரிகணை சொரிவன இரு மழை போல் ஒருவரை ஒருவர் குறித்து ஏயினர் - போராற்றல் மிக்க இந்திர சித்தும் இலக்குவனும் தீ அம்புகளையே சொரிகின்ற இரண்டுமே மேகங்களைப் போல ஒருவரை ஒருவர் குறித்து அம்புகளை ஏவினர். | (22) | 9138. | அற்றன, அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை; அடல் அரியின் |
|
|
|