பக்கம் எண் :

888யுத்த காண்டம் 

கொற்றவன் விடு கணை முடுகி, அவன்
    உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளி கிளர் கவசம் நுழைந்து
    உறுகில; தெறுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய, நெடும்
    பொரு சரம் அவன் அவை உணர்கிலனால்.
 

அனல் விழி நிருதன் வழங்கு அடுகணை இடை இடை அற்றன
- நெருப்புப்  போன்ற  கண்களை உடைய இந்திரசித்து எய்த கொல்லும்
இயல்புள்ள     அம்புகள்  (இலக்குவனால்  துணிக்கப்  பெற்று)  இடை
இடையே அற்று  வீழ்ந்தன;  அடல் அரியின் கொற்றவன் விடுகணை
முடுகி
 - வலிய   சிங்கத்தைப் போன்ற வெற்றியை உடைய இலக்குவன்
விடுகின்ற அம்புகள் விரைந்து சென்று; அவன் உடல் பொதிகுருதிகள்
பருகின  கொண்டு   உற்றன
 -  அவ்வரக்கனது  உடலில்  நிறைந்த
இரத்தத்தைப்  பருகிக்கொண்டு  அங்கே தங்கின; நெடும் பொரு சரம்,
ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில, தெறுகில
- இந்திர சித்து விடும்
நெடிய   அம்புகள்   இலக்குவனது  ஒளியோடு  விளங்கும்  கவசத்தில்
நுழைந்து     உடம்பில்  தைக்கவுமில்லை  அவனை  வருத்தவுமில்லை;
அனுமன் உடல்  புற்றிடை  அரவு  என  நுழைய அவன்  அவை
உணர்கிலனால்
 - ஆயின் (அவன் ஊர்தியான)  அனுமனது உடம்பில்
புற்றிடை   நுழையும்     பாம்புகள்   போல   எளிதாக   நுழைந்தன;
அவ்வனுமன் அவற்றை உணராதவனாயிருந்தான்.
 

                                                  (23)
 

9139.

ஆயிடை, இளைவன், விடம் அனையான்
    அவன் இடு கவசமும் அழிவுபட,
தூயினன், அயில் முக விசிகம்; நெடுந்
    துளைபட, விழி கனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரி கணைதான்
    இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன; அது தெரிவுறலால்,
    உரறினர் இமையவர், உவகையினால்.
 

ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும்
- (அனுமன்   மேல்   இந்திரசித்து   அம்புகளை   எய்த)  அப்போது
இளையவனாகிய    இலக்குவன்   நஞ்சு போன்றவனாகிய இந்திரசித்தன்
அணிந்திருந்த கவசமும்; அழிவுபட அயில்முக