பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 889

விசிகம்     தூயினன்  -   அழியுமாறு கூரிய முனையினை உடைய
அம்புகளைத்  தூவினான்; நெடுந் தொளைபட  விழி கனல் சொரிய
முனிந்து
 -  அந்த  அம்புகளால்   தன்  உடம்பில்  நெடிய தொளை
உண்டாகப்  பொறாது  கண்களில்  தீப்பொறி  சிந்த வெகுண்டு; ஏயின
நிருதனது எரிகணை தான் இடன்  இலபடுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன
 -  ஏவிய   அரக்கனது  எரிகின்ற  அம்புகள் குறிப்பிட்ட
விடத்திலன்றி    வேறிடத்தில்    படுவனவும்,   இடையிடையே  வந்து
ஓய்வுறுவனவும்       ஆயின;     அது   தெரிவுறலால் இமையவர்
உவகையினால்     உரறினர்
 -    அச்செயலைத்  தேவர் தெரிந்து
கொண்டதால் மகிழ்ச்சி மிக்கு ஆரவாரித்தனர்.
 

                                                  (24)
 

9140.

‘வில்லினின் வலி தரல் அரிது’ எனலால்,
    வெயிலினும் அனல் உமிழ் அயில், ‘விரைவில்
செல்’ என, மிடல் கொடு கடவினன்; மற்று
    அது திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளி பட எதிர்வது கண்டு,
    இளையவன் எழு வகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால்,
    நடு இரு துணிபட உரறினனால்.
 

வில்லினின்   வலிதரல் அரிது   எனலால்  -     வில்லினால்
இலக்குவனை வெல்லுதல்  அரிது  என  (இந்திர சித்து) எண்ணியதால்;
வெயிலினும்     அனல்  உமிழ் அயில் ‘விரைவில் செல்’ என -
சூரியனைக் காட்டிலும் வெப்பமான   கனலை   உமிழ்கின்ற  வேலினை
எடுத்து    விரைவில்  செல்வாயாக  என;  மிடல்  கொடு கடவினன்
மற்று அது திசைமுகன் மகன்  உதவியதால்
 -  வலிமை  கொண்டு
செலுத்தினான். அவ்வேல்  பிரமன்  மகன்  கொடுத்ததாம்;  எல்லினும்
வெளிபட   எதிர்வது  கண்டு  இளையவன்
  -  பகற்பொழுதினும்
விளக்கம்     உண்டாகத்    தன்னை   எதிர்த்து  வருவதைக்  கண்டு
இலக்குவன்; எழுவகை முனிவர்கள்தம்    சொல்லினும் வலியது ஓர்
சுடு கணையால்
- எழு முனிவர்களின் சாபச் சொல்லினும்  வலியதாகிய
ஒரு சுடும் இயல்புடைய அம்பினால்; நடு இரு  துணிபட   உரறினால்
-  நடுவே  அது  இரண்டு  துண்டாக   எய்துவிட்டு   மகிழ்ச்சியினால்
ஆரவாரித்தான்.
 

                                                  (25)
 

9141.

ஆணியின் நிலையன விசிகம் நுழைந்து,
ஆயிரம் உடல் புக, அழிபடு செஞ்