இராமன் வானரரை விலக்கி மயிடனை வினவல்
|
| 7772. | போதம் முதல், ‘வாய்மொழியே புகல்வான்; ஏதும் அறியான்; வறிது ஏகினனால்; தூதன்; இவனைச் சுளியன்மின்’ எனா, வேதம் முதல் நாதன் விலக்கினனால்.
|
போதம் முதல் - மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவனும்; வேதம் முதல் நாதன் - வேதங்கள் விளக்கும் சிறப்புப் பொருளாய் உள்ளவனும் ஆகிய இராமபிரான்; வாய் மொழியே புகல்வான் - (பற்றிய வானர வீரர்களைப் பார்த்து) இவன் தலைவன் கூறிய சொற்களைச் சொல்லுபவன்; ஏதும் அறியான் - வேறு எதுவும் அறியாதவன்; வறிது ஏகினனால் - படைக்கலம் இன்றி வெறுமனே வந்துள்ளான்; தூதன் - (ஆகவே இவன்) தூதுவனாக இருக்கலாம்; இவனைச் சுளியன் மின் எனா - (எனவே) இவனை வெகுளாதீர்கள் என்று; விலக்கினனால் - (அந்த வானர வீரர்களை) விலக்கினான்;
|
போதம் முதல் ஞானத்தால் அறியப்படும் முதல்வன் (மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவன்) சுளிதல் - வெகுளுதல், வேதம் முதல் நாதன் - வேதம் கிடந்து தடுமாறி விளக்கும் பொருள்.
|
(46)
|
| 7773. | ‘என், வந்த குறிப்பு? அது இயம்பு’ எனலும், மின் வந்த எயிற்றவன், ‘வில் வல! உன் பின் வந்தவனே அறி பெற்றியதால், மன் வந்த கருத்து’ என, ‘மன்னர்பிரான்!’
|
என் வந்த கருத்து அது இயம்பு எனலும் - (வானரரை விலக்கிய இராமன்) நீ வந்த காரணம் எது பற்றியது அதைச் சொல் எனக் கேட்ட அளவில்; மின் வந்த எயிற்றவன் - ஒளி பொருந்திய பற்களை உடைய (அந்த மயிடன்); வில்வல, மன்னர் பிரான் - வில் தொழில் வல்லவனே மன்னர் பெருமானே; மன் வந்த கருத்து - எம் மரசன் கொண்டுள்ள கருத்தை; உன் பின் வந்தவனே அறி பெற்றியதால் என - உன் பின் பிறந்தவனாகிய இலக்குவனே அறியும் தன்மையது என; (அடுத்த பாடலில் தொடர் முடியும்.)
|
(47)
|
இலக்குவன் வினவ, தூதன் தான் வந்த செய்தி உரைத்தல்
|
| 7774. | ‘சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு’ எனா, வில்லாளன் இளங்கிளையோன் விவை, |