பக்கம் எண் :

890யுத்த காண்டம் 

சோணிதம் நிலம் உற, உலறிடவும்,
     தொடு கணை விடுவன மிடல் கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும்,
     பகலவன் மருமகன், அடு கணை வன்
தூணியை உரும் உறழ் பகழிகளால்
     துணிபட, முறை முறை சிதறினனால்.

 

ஆயிரம் விசிகம் ஆணியின் நிலையன உடல் புக - இலக்குவன்
விடுத்த  ஆயிரம்  அம்புகள்  ஆணிகள் போலத்தைத்து இந்திரசித்தின்
உடம்பில்  புகுதலால்;  அழிபடு   செஞ்  சோணிதம்  நிலம்  உற,
உலறிடவும்
-அங்கிருந்து பெருகுகின்ற  சிவந்த  இரத்தம் நிலத்தில் விழ
உடம்பு இரத்தம் இல்லாமல் வற்றவும் (சோராது); தொடுகணை விடுவன
மிடல்  கெழுதிண்   பாணிகள்  கடுகின  முடுகிடலும்
 - வில்லில்
தொடுக்கின்ற   அம்புகளை   விடுவனவாகிய   வலிமை   பொருந்திய
திண்ணிய கைகள்  அம்புகளை   அம்பறாத்   தூணியிலிருந்து  எடுக்க
மிகவும்    விரைந்து    சென்ற    அளவில்;   பகலவன்   மருமகன்
அடுகணை வன் தூணியை
-  சூரிய  குலத்தோன்றலான  இலக்குவன்,
கொல்லுங்கணைகள்    நிறைந்த     வலிய     அம்பறாத்  தூணியை;
உரும்உறழ் பகழிகளால்  துணிபட  முறை  முறை    சிதறினனால்
- இடியையொத்த  வலிய   அம்புகளால்  துணிபடுமாறு முறை முறையே
எய்தான்.
 

                                                 (26)
 

9142.‘தேர் உளது எனின், இவன் வலி தொலையான்’
     எனும் அது தெரிவுற, உணர் உறுவான்,
போர் உறு புரவிகள் படுகிலவால்;
     புனை பிணி துணிகில, பொரு கணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை’ எனத்
     தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந்
     தரையிடை இடுதலும், முறை திரிய.
 

தேர்  உளது எனின் இவன் வலி தொலையான் - தேர் அழியா
திருக்குமாயின்  இந்த  இந்திரசித்து  வலிமை  அழியான்; எனும் அது
தெரிவுற,   உணர்   உறுவான்
- என்கின்ற  அதனைத்  தெளிவாக
உணர்ந்துள்ள  இலக்குவன்; பொருகணையால் போர்  உறு புரவிகள்
படுகிலவால்
 -  (தேரை  அழிக்க  முயன்று  பார்த்து)  நமது  போர்
செய்யும் கணைகளால் இவன் தேரில் பூட்டியுள்ள போர்த்