பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 891

தன்மை    பொருந்திய குதிரைகள் வீழ்ந்தில; புனை பிணி துணிகில
சீரிது பெரிது இதன் நிலைமை எனத் தெரிபவன்
-தேர் உறுப்புகள்
பொருந்தி   உள்ள  மூட்டுவாய்களும்  துணிபடவில்லை.  இத்தேரின்
நிலைமை மிக்க சிறப்புடையது என்று தெரிந்தவனாய்; ஒரு சுடு தெறு
கணையால் சாரதி மலை புரை தலையை
-ஒரு சுடுகின்ற அழிக்கும்
அம்பினால்  அத்தேர்ப்பாகனது  மலை போன்ற தலையைக் கொய்து;
முறை திரிய நெடுந் தரையிடை இடுதலும் - அவன் நிலை கெடப்
பெரிய தரையினில் இடுதலும்.
 

                                                (27)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9143.உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின், தவத்தை நண்ணி.
அய்வினை நலிய, நைவான் அறிவிற்கும் உவமை ஆகி
மெய் வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலாப்
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது - அப்பொலம் 
                                 பொன் திண் தேர்.
 

உய்வினை   ஒருவன்  தூண்டாது  உலத்தலின்  அப்பொலம்
பொன்திண்  தேர்
- தேரைச் செலுத்துகின்ற வினையை மேற்கொண்ட
ஒப்பற்ற  பாகன்  (குதிரையைத் தூண்டாமல் பகைவர் கையில்) இறந்து
பட்டதனால் அந்தப் பொன் மயமான அழகிய தேர்; தவத்தை நண்ணி
அய்வினை   நலிய   நைவான்   அறிவிற்கும் உவமை  ஆகி
-
தவவேடத்தை    மேற்கொண்டும்    (அவ்வேடத்திற்குப்   பகையாய்)
ஐம்பொறிகளின்   செயல்   தன்னை    வருத்த   வருந்துகின்றவனது
(அழிவுற்ற)   ஞானத்திற்கும்  உவமையாகப்   பொருந்தி;  மெய்வினை
அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலாப்
- (உள்ளம் ஒன்றாது)
உடம்பின்     செயலாக    மட்டும்     அமைந்த    காமநுகர்ச்சியை
வேண்டுவார்க்கு     விலை     பெற்று     விற்கின்ற    தந்திரத்தில்
தோல்வியுறாமல்;  பொய்வினை மகளிர் கற்பும் போன்றது - தேர்ச்சி
பெற்ற  பொய்யான  செயல்களைச்  செய்கின்ற  வேசியரின்  அழிவுற்ற
கற்பொழுக்கமும் போன்றது.
 

                                                  (28)