பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 893

துணிவுடையவர்    ஆவர்; என்று அமரர் செப்பி தெய்வப் பொற்பூ
சிந்தினார்
 - என்று தேவர்கள் சொல்லிக் கொண்டு தெய்வத் தன்மை
வாய்ந்த கற்பக மலர்களாகிய பொன் மலர்களைச் சொரிந்தார்கள்.
 

                                                  (30)
 

9146.‘எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்;
கய் தடுமாறாது; உள்ளம் உயிர் இனம் கலங்கா; யாக்கை
மொய் கணை  கோடி   கோடி  மொய்க்கவும்,  இளைப்பு
                                    ஒன்று இல்லான்,
அய்யனும்,  ‘இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல்
                                         என்றான்.
 

அய்யனும், எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல்
எய்யும் 
-  இலக்குவனும், “யான்  எய்த  வலிய அம்புகளையெல்லாம்
பறித்து இவன் என்மேல் எய்கின்றான்; கய் தடுமாறாது உள்ளம் உயிர்
இனம்  கலங்கா
 -  இவன்  கை தடுமாற வில்லை,  இவன் உள்ளமும்
உயிரும்  இன்னும்  துளங்காமல் இருக்கின்றன;  யாக்கை மொய்கணை
கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு  ஒன்று  இல்லான்
- (இவன்)
உடம்பில்    வலிமை    வாய்ந்த    அம்புகள்   கோடி   கோடியாக
மொய்த்துதைக்கவும்     இளைப்புச்     சிறிதும்       இல்லாதவனாக
இருக்கின்றான்; ஆண்மைத் தொழில் ஆற்றல்  இவனோடு  எஞ்சும்
என்றான்
 - (ஆதலால்) ஆண்மைத் தொழிலாகிய ஆற்றல்  இவனோடு
அழியும் என்று வியந்து கூறினான்.
 

                                                 (31)
 

            இந்திரசித்தன்   இரவில்  இறவான் என  இலக்குவனுக்கு
                                         வீடணன  இயம்புத
ல்
 

9147.‘தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும் புணர்க்கும்;
                                       போய் அக்
காரினைக் கடந்தும் வஞ்சம், கருதினும் கருதும், காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின்,
                                      வெய்யோன்.