பக்கம் எண் :

894யுத்த காண்டம் 

தேரினைக் கடாவி வானில் செல்லினும் செல்லும் - தேரினைச்
செலுத்திக்கொண்டு   வானத்தில்  சென்றாலும்  செல்வான்;  செய்யும்
போரினைக்   கடந்து  மாயம் புணர்க்கினும் புணர்க்கும்
 - நேரே
செய்யும்   போரை   விடுத்து  (இவ்விடத்தே)  மாயச்  செயல்களைச்
செய்தாலும்  செய்வான்;  போய் அக் காரினைக் கடந்தும் வஞ்சம்
கருதினும்  கருதும்
 -  விண்ணில்  போய்  அந்த மேகத்தில் கலந்து
கொண்டு  வஞ்சனைச் செயல்கள் செய்ய  நினைத்தாலும் நினைப்பான்;
வீர காண்டி, வெய்யோன் பகலில்  அன்றி  இருளின் விளிகிலன்
மெய்
-  வீரனே!   கருத்தோடு   காண்பாயாக!  கொடியனாகிய இந்த
இந்திரசித்து பகலில் அன்றி இருளில் இறக்கமாட்டான்; இது உண்மை.
 

                                                 (32)
 

9148.என்று   எடுத்து  இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப,
                                         ‘இன்னே
பொன்றுவது அல்லால், அப்பால் இனி ஒரு போக்கும்
                                       உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தெறு கணை; வலியின்
                                        தீர்ந்தான்,
வென்றி இப்போதே கோடும்; காண்’ என விளம்பும் எல்லை.
 

என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப-என்று
இலங்கை   வேந்தனாகி,  இராவணனுக்கு  இளையவனாகிய  வீடணன்
எடுத்துச் சொல்ல;  இன்னே பொன்றுவது அல்லால் அப்பால் இனி
ஒரு போக்கும்  உண்டோ
 -  (இலக்குவன்)  இப்பொழுதே  அவன்
இறப்பது  அல்லால்  இனி  ஒருமுறை அப்பால் போதலும் உண்டோ?
தெறுகணை  சென்றுழிச்  செல்லும்  அன்றே  -  அழிக்கின்ற என்
அம்புகள் அவன்  சென்ற இடத்திற்குச் செல்லும்  அன்றோ?  வலியின்
தீர்ந்தான்
 -  (அவன்)  வலிமை  நீங்கினான்; இப்போதே வென்றி
கோடும்  காண்  என  விளம்பும் எல்லை
- இப்பொழுதே வெற்றி
கொள்வோம் பார்ப்பாயாக  என்று சொல்லும் அளவில்;
 

                                                 (33)
 

9149.செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்,