பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 895

வெம்பு  பொன் தேரில்  தோன்றும் சிறப்பினும், அரக்கன்
                                     மெய்யோடு
உம்பரில் செல்கின்றான் ஒத்து, உதித்தனன், அருக்கன்
                                        உப்பால்.
 

செம்புனல் சோரிச் செக்கர்  திசை  உறச்  செறிகையாலும் -
செந்நீராகிய இரத்தம் போன்ற செக்கர் வானம் (கீழ்த்)  திசையின் கண்
பொருந்த   நெருங்குகையினாலும்;   அம்பு என உற்ற  கொற்றத்து
ஆயிரம்  கதிர்களாலும்
 - அம்புகளைப் போலப் பொருந்திய வெற்றி
வாய்ந்த  ஆயிரங் கதிர்களையுடைமையாலும்; வெம்பு பொன் தேரில்
தோன்றும்  சிறப்பினும்
 - வெம்புகின்ற பொன் தேரில் தோன்றுகின்ற
சிறப்புடைமையாலும்; அரக்கன் மெய்யோடு உம்பரில் செல்கின்றான்
ஒத்து   அருக்கன்   உப்பால் உதித்தனன்
-  இந்திரசித்தன்  தன்
உடம்போடு   தரையிலிருந்து   விண்ணில்   செல்பவனைப்  போன்று
சூரியன் கீழ்த்திசையில் உதித்தான்.
 

                                                 (34)
 

9150.விடிந்தது   பொழுதும்;   வெய்யோன்   விளங்கினன்,
                                   உலகம் மீதாய்,
இடுஞ் சுடர் விளக்கம் என்ன அரக்கரின் இருளும் வீய,
‘கொடுஞ் சின மாயச் செய்கை வலியொடும் குறைந்து
                                         குன்ற,
முடிந்தனன், அரக்கன்’ என்னா, முழங்கினர், உம்பர்
                                         முற்றும்.
 

பொழுதும்    விடிந்தது அரக்கரின் இருளும் வீய - பொழுதும்
விடிந்தது.  அரக்கரைப்  போன்று  இருளும் அழியுமாறு; வெய்யோன்
உலகம் மீதாய் இடும் சுடர் விளக்கம் என்ன விளங்கினன்
-சூரியன்
உலகின்மேல்  இட்ட சுடர் விடுகின்ற  விளக்கு  என்னும் படி விளக்கம்
பெற்றுவிட்டான்;  அரக்கன்   வலியொடும்   கொடுஞ்  சினமாயச்
செய்கை குறைந்து  நின்ற
 - இனி  இந்திரசித்து  தன் வலிமையொடு
கொடிய  கோபமும்  மாயச்  செயலும்  குறைந்து  அழிய; முடிந்தனன்
என்னா உம்பர் முற்றும் முழங்கினர்
- முடிந்தனனே ஆவான் என்று
தேவர் வானமெங்கும் ஆரவாரித்தனர்.
 

                                                 (35)