பக்கம் எண் :

896யுத்த காண்டம் 

‘சிவன் ஈந்த தேரும் சிலையும் இருக்கும் வரை அழியான்’ என வீடணன்
                                                 குறிப்பித்தல்
 

9151.ஆர் அழியாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரந்து இருந்தபோதும்,
போர்   அழியான்,  இவ்  வெய்யோன்;  புகழ்  அழியாத
                                  பொன்  - தோள்

வீர! இது ஆணை’ என்றான்-வீடணன், விளைவது ஓர்வான்.
 

விளைவது ஓர்வான் வீடணன் -மேல் நிகழ்வதை அறிந்தவனாகிய
வீடணன்;  புகழ்  அழியாத  பொன் - தோள் வீர! - (இலக்குவனை
நோக்கி)  புகழ்  அழியாமைக்குக்  காரணமாகிய  அழகிய  தோள்களை
உடையவீரனே!ஆர் அழியாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த-
கூர்மையழியாத  சூலப்படையை  உடைய அந்தணனாகிய சிவபெருமான்
அருள்  செய்து  கொடுத்த;தேர் அழியாத  போதும், சிலை கரத்து
இருந்தபோதும்
 -  தேர்  அழியாதபோதும்,  வில்  அவன்  கரத்தில்
இருக்கும்  போதும்; இவ்வெய்யோன் போர் அழியான் இது ஆணை’
என்றான்
  -   இக்கொடியவன்   போரில்   அழியமாட்டான்.   இது
அவ்விறைவனின் ஆணையாகும்’ என்று கூறினான்.
 

இவ்வரத்தினை     இந்திரசித்து  எங்ஙனம்  பெற்றான்  என்பது
காணற்பாலது.     ‘தேரும்     வில்லும்     சிவன்     அருளினால்
கொடுக்கப்பெற்றவை.   அவை  அழியாமலிருக்கும்  போது  இவனும்
அழியான்   என்பது  அக்கடவுள்  இவனுக்குக்  கொடுத்தவரம்’  என
வீடணன்  இலக்குவனுக்கு  இந்திரசித்தினை உயிர் வாங்கற்கு உபாயங்
கூறியவாறு.
 

                                                 (36)
 

   இலக்குவன்  இந்திரசித்தன்  தேரைச்  சிதைக்க,  அவன்  விண்ணில்
                                        மறைந்து ஆரவாரித்தல்

 

9152.‘பச்சை வெம் புரவி வீயா; பல்லியச் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா’ என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி.