| | இந்திரசித்து வதைப் படலம் | 897 |
வில்லின் விச்சையின் கணவன் ஆனான் - வில்வித்தைக்குத் தலைவனாகிய இலக்குவன்; ‘வெம்பச்சைப் புரவிவீயா - (இந்திரசித்தின் தேரில் பூட்டியுள்ள) கொடிய பச்சைப்புரவிகள் இறந்துபடா; பல்லியச் சில்லிபாரில் நிச்சயம் அற்று நீங்கா - பல இயல்புகள் அமைந்த (தேரின்) சக்கரங்கள் உறுதியற்று பூமியில் அழியா; என்பது நினைந்து வின்மையால் ஆணி நீக்கி - என்பதை நினைந்து தன்வில்லின் திறத்தால் கடையாணியை நீக்கிவிட்டு;வயிரம் இட்ட அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் - வயிரத்தன்மை பொருந்திய அச்சினோடு சக்கரத்தை வெவ்வேறாகப் பிரித்து விட்டான். | (37) | | 9153. | மணி நெடுந் தேரின் கட்டு விட்டு, அது மறிதலோடும், அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே- திணி நெடு மரம் ஒன்று, ஆழி வாள் மழுத் தாக்க, சிந்திப் பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல. | மணி நெடுந் தேரின் கட்டுவிட்டு அது மறிதலோடும் - ஒளி மணிகள் பதித்துச் செய்யப்பட்ட நெடிய தேரின் கட்டுக்கோப்பு நீங்கி, அத்தேர் கீழ்மேல் ஆனவுடன்; அணி நெடும் புரவி எல்லாம் - (அத்தேரில் கட்டியிருந்த) அழகிய பெருமை வாய்ந்த குதிரைகள் எல்லாம்; திணி நெடும் மரம் ஒன்று ஆழிவாள் மழுத்தாக்க - திண்மையான நீண்ட மரம் ஒன்று சக்கரப்படையைப் போன்ற கூர்மையுடைய கோடாலி தாக்குதலால்;சிந்திப்பணை நெடு முதலும் நீங்க - சிதறிப் பருத்த நெடிய அடி மரமும் துணிபட்டு வேறாகி நீங்க; பாங்கு உறை பறவை போல ஆற்றல ஆய அன்றே - அம்மரத்திடத்தே தங்கி இருந்த பறவைகளைப்போலப் பிரிவாற்றாதனவாய் வருந்துவனவாயின. | (38) | | 9154. | அழிந்த தேர்த் தட்டின்நின்றும் அங்குள்ள படைகள் அள்ளிப் பொழிந்தன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க, |
|
|
|