| மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான், உலகம் மூன்றும் கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார், | அழிந்த தேர்த்தட்டின் நின்றும் அங்குள்ள படைகள் அள்ளி- அழிந்துபட்ட தேரின் தட்டில் நின்று கொண்டு அத்தட்டில் இருந்த படைக்கலங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு; பொழிந்தனன், இளைய வீரன் கணைகளால் துணித்துப்போக்க - இலக்குவன் மேல் பொழிந்தான் இந்திரசித்து; அவற்றையெலாம் இலக்குவன் தன் அம்புகளால் துண்டித்து அழிக்க; மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான் - சொல்லுஞ்சொல் முடிவதற்குமுன் (வெகுவிரைவில்) வானத்தில் மூண்டு நின்று; உலகம் மூன்றும் கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர் ஓசை கேட்டார் - உலகங்கள் மூன்றும் கிழிந்தன என்று எண்ணுமாறு ஆரவாரித்தான்; யாரும் அவன் வடிவைக் கண்டிலர்; ‘ஆனால் அவன் ஆரவாரத்தை மட்டும் கேட்டனர். | (39) | இந்திரசித்தன் - இலக்குவன் போர் | 9155. | மல்லின் மா மாரி அன்ன தோளினான், மழையின் வாய்ந்த கல்லின் மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியும்காலை, செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள் சிந்தப் புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார். | மல்லின் மாரி அன்ன தோளினான் - மற்போர் பயிற்சியினை உடையதும் கரிய மேகம் போன்ற நிறத்தினை உடையதுமான தோளினை உடைய இந்திரசித்து; மழையின் வாய்ந்த கல்லின் மாமாரி - மேகத்தில் பொருந்தி இருந்த கல்லினாலாகிய மழையை; பெற்றவரத்தினால் சொரியுங்காலை - தான் முன்பெற்ற வரத்தினால் சொரியும் போது; செல்லும் வான் திசைகள் ஓரார் போகார் நின்ற வானரவீரர் - தப்பிச் செல்லுவதற்குரிய சிறந்த திசைகளையும் அறியாதவராய் போகவியலாமல் நின்றவானர வீரர்கள்; |
|
|
|