பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 899

சிரத்தினோடு உடல்கள் சிந்தப் புல்லினார் நிலத்தை- தலைகளோடு
உடல்கள்   சிதையப்   பெற்றுத்  தரையில்  வீழ்ந்து கிடந்தார்கள்.
 

                                                  (40)
 

9156.காண்கிலன், கல்லின் மாரி அல்லது, காளை வீரன்,
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள்
                                       எங்கும்
மான் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ,
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல்.
 

காளை வீரன், சேண்கலந்து  ஒளித்து  நின்ற  செய்கையால் -
காளைவீரனான   இலக்குவன்   (இந்திரசித்து)    வானத்துச்   சென்று
மேகத்தில்  மறைந்து  நின்ற  செய்கையால்;  கல்லின்  மாரி அல்லது
காண்கிலன்
 -  கல்லின்  மழை அல்லது  அவன் வடிவினைச் சிறிதும்
காணமாட்டாதவனாய்;   மாண்    கலந்து     திசைகள்   எங்கும்
அளந்தமாயன்  முடிவு  என  முழுவதும் வௌவ
- பெருமையோடு
பொருந்தித்    திசை   முழுவதையும்   அளந்த   (திருவிக்கிரமனான)
திருமாலின் வடிவுபோல விண்  முழுவதையும்  கவர்ந்து  கொள்ளுமாறு;
ஏண்  கலந்து  அமைந்த  வாளி   இடைவிடாமல்   ஏவினான் -
வலிமை  கலந்து  பொருந்திய  அம்புகளை இடைவிடாமல் ஏவினான்.
 

                                                 (41)
 

9157.மறைந்தன திசைகள் எங்கும்; மாறு போய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குறுதிக்
                                         கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைவது
                                         ஆனான்:
 

திசைகள்  எங்கும் மறைந்தன - (இலக்குவன் விட்ட அம்புகளால்)
திசையிடம்  முழுவதும்  மறைந்தன;  மாறுபோய்  மலையும் ஆற்றல்
குறைந்தனன்
-  (அவனுக்கு) மாறாகச் சென்று போர் செய்யும் வலிமை
குறைந்தவனாய்; இருண்ட மேகக்  குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான்