பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 9

அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.*
 

பெண்  எலாம் நீரே ஆக்கி - நான் விரும்பும் பெண் எலாம் நீரே
என்று  ஆக்கி;  பேர்  எலாம்  உமதே  ஆக்கி  -  யான்  விரும்பி
அழைக்கிற  பெயர் எல்லாம்  உம்முடைய பெயரே என்று ஆக்கி;  கண்
எலாம்  நும்  கண் ஆக்கி
- என் இருபது கண்களும் உம்மை மட்டும்
பார்க்கும்   கண்கள்   என  ஆக்கி;  காமவேள்  என்னும்  நாமத்து
அண்ணல்  எய்வானும்  ஆக்கி
 - காமவேள் என்று பெயர் கொண்ட
தலைமையில்  சிறந்தவனை  என்  மீது  மலரம்புகளைத்  தொடுப்பவன்
என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி
- அக்காமனின்  ஐந்து  வகை அம்புகள் எல்லாம் எனக்கு  உண்டாக்கக்
கூடிய  புண்கள்  எல்லாம்  எனக்கு  உண்டாகுமாறு செய்து;  விபரீதம்
புணர்த்து  விட்டீர்  
-  என்னிடம்  மாறுபாடான நிலை தோன்றுமாறு
செய்து விட்டீர்.
 

ஐங்கணை -  தாமரை.  அசோகு,  மா, முல்லை, நீலம் ஆகிய ஐந்து
மலர் அம்புகள். விபரீதம் - மாறுபாடு.
 

                                                 (12)
 

7644.

‘ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால்
                                        வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான்
                                    மாசுணாதோ?

 

ஈசனே  முதலா -  சிவபிரானை   முதலாகக்   கொண்டு;  மற்றை
மானிடர்  இறுதி  ஆகக்  கூச  
-  மற்று  மானிடர்   வரை  உள்ள
அனைவரும் அஞ்சும்படி;  மூன்று உலகும்  காக்கும்  கொற்றத்தென்
-   மூன்று   உலகத்தையும்  காக்கும்படி   வெற்றி   படைத்த   நான்;
வீரக்கோட்டி பேசுவார் ஒருவர்க்கு ஆவி  தோற்றிலென்  -  வீரர்
வரிசையில் பேசப்படுபவர்  எவருக்கும் உயிர் தோற்றிலென்; பெண்பால்
வைத்த ஆசை  நோய்  கொன்றது  என்றால்
 -  அத்துணை வீர
வலியுடைய என்னைப் பெண்ணிடம் வைத்த காம நோய்