பக்கம் எண் :

90யுத்த காண்டம் 

‘பல் ஆயிர கோடி படைக் கடல் முன்
நில்லாய்’ என, நின்று நிகழ்த்தினனால்.

வில்லாளன்     இளங்கிளையோன்  -  வில்லாளனாகிய  இராம
பிரானுக்குத்  தம்பியாகிய  இலக்குவன்;  அது  சொல்லாய் - (நீ வந்த
காரணத்தைச்)  சொல்வாய்;  சொல்லிடு சொல்லிடு  எனா  வினவ  -
சொல்லிடு என்று  வினவ;  பல்  ஆயிர கோடி படைக் கடல் முன் -
(அதிகாயனுடைய)  பல  ஆயிரம்  கோடிப் படையாகிய  கடலுக்கு முன்;
நில்லாய் என  - எதிர்த்து நிற்பாய் என்று; நின்று நிகழ்த்தினனால் -
நின்று கொண்டு மேலும் கூறத் தொடங்கினான்.

சொல்லிடு சொல்லிடு  - விரைவு கருதி வந்த அடுக்கு, படைக் கடல்
- உருவகம், நில்லாய் - நிற்பாயாக.

                                                  (48)

7775.‘உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்-

தன்மேல் எதிரும் வலி தக்குளையேல்,
பொன் மேனிய! என்னொடு போதுதியால்.

பொன்   மேனிய - பொன்   போன்ற  மேனிய;   உன்   மேல்
அதிகாயன்   உருத்துளனாய்
- உன்   மீது     அதிகாயன்   சினம்
கொண்டவனாகி; நாடி  நல்மேருவின்  நின்றனன் -  (உன்னை) எதிர்
பார்த்து நல்ல மேருமலை  போல்  நின்றுள்ளான்;  அவன் தன் மேல்
எதிரும் வலி தக்குளையேல்
- அவன் தன்    மேல்    எதிர்ப்பதற்கு
உரிய வலிமை பெற்றுள்ளாயானால்; என்னோடு போதுதி - என்னோடு
வருவாய்.

உருத்தல்  -  சினத்தல்,  நாடி  -  எதிர்பார்த்து,  தக்குளையேல் -
தகுதியைப்  பெற்றுள்ளாயானால்.  பொன்  மேனிய  -  அண்மை விளி,
போதுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று. ஆல் - அசை.

                                                  (49)

7776.‘சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து,
ஐயப்படல், அப்படி இப் படியில்
செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால்.

சையப்   படிவத்து ஒரு தந்தையை -  மலை போன்ற வடிவுடைய
தந்தையின்  (கும்பகருணனது);  மெய் எப்படி  நும்முன் செய்தனன் -
உடம்பை எப்படி உன் தமையன் முன்பு