உருவினை - இருண்ட மேகக் கூட்டத்தினிடையே இரத்தம் சொரியும் மேகம் ஒன்று தங்கியுள்ளது என்னுமாறு நின்றவனாகிய இந்திரசித்தன் உருவத்தை; உலகம் எல்லாம் நிறைந்தவன் கண்டான்; காணா இனையது ஓர் நினைவது ஆனான்- உலகெங்கும் நிறைந்து நிற்பவனாகிய இலக்குவன் பார்த்தான்; பார்த்து இத்தகையதொரு எண்ணத்தை உடையவனான். | (42) | 9158. | ‘சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன் திரண்ட தோளாம் மலை அறாது ஒழியாது’ என்னா, வரி சிலை ஒன்று வாங்கி, கலை அறாத் திங்கள் அன்ன வாளியால், கையைக் கொய்தான்- விலை அறா மணிப் பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ. | சிலை அறாது எனினும் - (இந்திரசித்தின்) வில் என் அம்பினால் அறுபடாத தெய்வத்தன்மை உடையது எனினும்; மற்று அத்திண்ணியோன் திரண்ட தோளாம் மலை அறாது ஒழியாது என்னா - அத்திண்மைமிக்கவனாகிய இந்திரசித்தின் திரண்ட தோளாகிய மலை அறாமலிருக்காது என்று கருதிக் கொண்டு; வரிசிலை ஒன்று வாங்கி கலை அறாத்திங்கள் அன்ன வாளியால் - கட்டமைந்ததொரு வில்லை வளைத்து ஒருகலை அறாதுள்ள பிறைத்திங்களைப் போன்ற அம்பினால்; கையை, விலை அறாமணிப்பூணோடும், வில்லொடும், நிலத்து வீழக் கொய்தான் - அந்த இந்திரசித்தினுடைய கையை விலைதீராத (விலைமதிப்புடைய) மணிகள் பதித்த அணிகலன்களோடும் வில்லொடும் தரையில் வீழுமாறு அறுத்துத் தள்ளினான். | (43) | 9159. | பாக வான் பிறைபோல் வெவ் வாய்ச் சுடு கணை படுதலோடும், வேக வான் கொடுங் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்,- மாக வான் தடக் கை மண்மேல் விழுந்தது மணிப் பூண் மின்ன- மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன. |
|
|
|