பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 901

வான்பாகப் பிறை போல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்-
(இலக்குவன்  விடுத்த)   வானில்  தோன்றும் பிறைச்சந்திரனைப் போல்,
கொடிய வாயினை உடையதாய்ச் சுடுகின்ற  இயல்பினை  உடைய அம்பு
(இந்திரச்சித்தன்மேல்)  பட்டவுடனே;  வேகவான் கொடுங்கால்  எற்ற
முற்றும் போய் விளியும் நாளில்
-மிக்க வேகத்தையுடைய கடுங்காற்று
மோதுதலினால்  உலகம் முழுவதும்  சென்று  அழியும் ஊழி இறுதியில்;
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும்  வீழ்ந்தது என்ன - மேகம்
ஆகாயத்தில்     இட்ட     இந்திர    வில்லினோடும்    (மண்மிசை)
வீழ்ந்ததுஎன்னும்படி; மாகவான்  தடக்கை மணிப் பூண் மின்ன மண்
மேல்    விழுந்தது
  -   ஆகாயத்தில்   இருந்த   சிறந்த   பெரிய
அவ்விந்திரசித்தின்    கை   மணிகள்   பதித்த   அணிகலன்  மின்ன
மண்மிசை வீழ்ந்தது.
 

                                                  (44)
 

9160.படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையைப் பற்றிக்
கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ் சிலையினோடும், பேர் எழில் வீரன்
                                  பொன்-தோள்
துடித்தது,-மரமும் கல்லும் துகள் பட, குரங்கும் துஞ்ச.

 

படித்தலம்  சுமந்த   நாகம்  -  பூமியைச்  சுமந்து  கொண்டுள்ள
ஆதிசேடன் என்னும் பாம்பு; பாக வான் பிறையைப் பற்றிக் கடித்தது
போல
 -  வானிலுள்ள  சந்திரனின்  பாகமாகிய  பிறைச்  சந்திரனைப்
பற்றிக்    கடித்தது    போல; கோலவிரல்களால்  இறுகக்   கட்டிப்
பிடித்தவெஞ்     சிலையினோடும்
    -    அழகிய   விரல்களால்
இறுகக்கட்டிப்பிடித்த  கொடிய  வில்லினோடும்;  பேர்  எழில்  வீரன்
பொன்   -   தோள்
  -   பேரழகுடைய   இந்திரசித்தன்  அழகிய
தோள்; மரமும்   கல்லும்  துகள்பட  குரங்கும் துஞ்ச துடித்தது -
மரங்களும் கற்களும் துகளாகவும் குரங்குகள்  இறந்து  படவும் நிலத்தில்
வீழ்ந்து துடித்தது.
 

                                                  (45)
 

9161.அந்தரம்அதனில் நின்ற வானவர், ‘அருக்கன் வீழா,
சந்திரன் வீழா, மேரு மால் வரை தகர்ந்து வீழா,