பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 903

கண்டவர்களாகிய   அரக்கர்   தம்   தலை  அற்றவர்களைப்  போல
மனம் கலங்கினார்கள்.
 

                                                 (47)
 

9163.அன்னது   நிகழும்   வேலை,   ஆர்த்து   எழுந்து,
                             அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளாவண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால்; மரங்களால், மானக்
                                     குன்றால்,

பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக் குடி ஏற்றிற்று அன்றே.

 

அன்னது நிகழும் வேலை அரியின் வெள்ளம் ஆர்த்து எழுந்து
- இந்திரசித்தன்   கையற்று  வீழ்ந்தது  கண்டு  அரக்கர்கலங்கியபோது,
குரங்குச் சேனை ஆரவாரித்து எழுந்து; மின் எயிற்று அரக்கர் சேனை
யாவரும்  மீளா  வண்ணம்
 -  மின்னலைப்  போன்று  ஒளி  வீசும்
கோரைப்    பல்லினையுடைய    அரக்கர்     சேனையில்    எவரும்
மீளாதபடி; கொல்   நகக் கரத்தால், பல்லால், மரங்களால்,  மானக்
குன்றால்
  -   கொல்லுதற்குரிய    நகத்தை   உடைய  கையினாலும்,
பல்லினாலும், மரங்களாலும், பெரிய  குன்றுகளாலும்  (கொன்று); பொன்
நெடு  நாட்டை எல்லாம் புதுக்குடி ஏற்றிற்று அன்றே
- பொன்னாடு
முழுவதிலும் புதிதாகக் குடிகளை ஏறச் செய்தது.
 

                                                  (48)
 

9164.காலம்   கொண்டு   எழுந்த   மேகக்   கருமையான்,
                               ‘செம்மை காட்டும்
ஆலம்   கொண்டு   இருண்ட  கண்டத்து  அமரர்கோன்
                                  அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல்’ என்று தோன்றினான், ‘பகையின்
                                         தோற்ற
மூலம்   கொண்டு   உணரா  நின்னை  முடித்து  அன்றி
                               முடியேன்’ என்றான்.
 

காலம்  கொண்டு எழுந்த மேகக் கருமையான் - கார்காலத்து நீர்
கொண்டு    எழுந்த    மேகம்  போன்ற  கருமையுடைய  இந்திரசித்து;
செம்மை  காட்டும்   ஆலம்   கொண்டு   இருண்ட   கண்டத்து அமரர்கோன்- செம்மேனியும் அதனால் மிகுவித்துக்