காட்டப்பெறும் நஞ்சுண்டு இருண்ட கண்டத்தினையும் உடைய தேவர் தலைவனாகிய சிவபெருமானின்; அருளின் பெற்ற ‘சூலம் கொண்டு எறிவல்’ என்று தோன்றினான் - அருளினால் தான் பெற்றதான சூலப்படையைக் கொண்டு (இவன்மீது) எறிவேன் என்று தோன்றியவனான இந்திரசித்து; ’பகையின் தோற்ற கொண்டு மூலம் உணரா நின்னை - (எனது) பகைவாக்ளுக்குள்ளே மானிட வடிவமாகிய உனது புறத்தோற்றத்தைக் கொண்டு (அவ்வடிவத்திற் கொவ்வா ஆற்றலின்) மூலத்தை உணர முடியாத உன்னை; முடித்தன்றி முடியேன் என்றான் - கொன்றன்றி யான் இறவேன்’ என்று கூறினான். | (49) | 9165. | காற்று என, உரும்ஏறு என்ன, கனல் என, கடை நாள் உற்ற கூற்றம ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன, கொல்வான் தோற்றினான்; அதனைக் காணா, ‘இனி, தலை துணிக்கும் காலம் ஏற்றது’ என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான். | கடைநாள் உற்ற காற்று என, உரும் ஏறு என்ன கனல் என - ஊழியிறுதியில் வந்த காற்று என்னும் படியும், இடியேறு என்னும்படியும், வடவைக்கனல் என்னும் படியும்; கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன - எமன் ஒரு சூலத்தைக் கொண்டு நெருங்கினான் என்னும்படியும்; கொல்வான் தோன்றினான் - (இலக்குவனைக்) கொல்வதற்காக (இந்திரசித்து) தோன்றினான்; அதனை அயோத்தி வேந்தற்கு இளையவன் காணா -அதனை இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன் கண்டு; ’இனி, தலை துணிக்கும் காலம் ஏற்றது, என்று இதனைச் செய்தான் - ‘இப்பொழுது இவன் தலையைத் துணிக்கும் காலம் ‘வந்துவிட்டது’ என்று இச்செயலைச் செய்தான். | (50) | இலக்குவன் பிறைமுக அம்பு எய்து இந்திரசித்தன் தலையை அறுத்தல் | 9166. | ‘மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற்பால, இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்திஎன்னின், |
|
|
|