அப்பகழிப்புத்தேள் - (இலக்குவன் விடுத்த) அவ் அம்புத் தெய்வம்; நேமியும், குலிசவேலும் - (திருமாலின்) சக்கரப்படையும், (இந்திரனின்) வச்சிரப்படையும்; நெருப்புக் கண்ணான் நாம வேல்தானும் - நெற்றியில் நெருப்புக் கண்ணை உடைய உருத்திரனின் அஞ்சத்தக்க சூலவேலும்; மற்றை நான் முகன் படையும் நாண - எஞ்சியுள்ள பிரமனுடைய பிரமாத்திரமும் நாணுமாறு; தீமுகம் கதுவ ஓடிச்சென்று அவன் சிரத்தைத்தள்ளி - நெருப்பு முனையில் பற்றி எரியும் படியாக ஓடிச் சென்று அந்த இந்திரசித்தின் தலையை அறுத்துத் தள்ளிவிட்டு; அமரர் பூமழை சிந்த, பொலிந்தது - தேவர்கள் மலர்மாரி சொரிய விளங்கிற்று. | (52) | 9168. | அற்றவன் தலைமீது ஓங்கி, அண்டம் உற்று அணுகாமுன்னம், பற்றிய சூலத்தோடும், உடல் நிறை பகழியோடும், எற்றிய காலக் காற்றால், மின்னொடும் இடியினோடும் சுற்றிய புயல் வீழ்ந்தென்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை. | அற்றவன் தலை மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா முன்னம் - (இலக்குவனது அம்பினால்) அறுபட்ட வலியதலை, மேலே உயர்ந்து சென்று விண் முகட்டை முட்டி விட்டுத் தரையை அணுகுதற்கு முன்னமே; காலக்காற்றில் எற்றிய சுற்றிய புயல் - வீசிய ஊழிக்காற்றினால் தாக்குண்டு சுற்றிக் கொண்டிருந்த மேகம்; மின்னொடும் இடியினோடும் வீழ்ந்தென்ன - மின்னலோடும் இடியினோடும் தரையில் வீழ்ந்தாற்போல; சோரன்யாக்கை பற்றிய சூலத்தோடும், உடன் நிறை பகழியோடும் வீழ்ந்தது - கள்வனாகிய இந்திரசித்தன் உடம்பு, ஒரு கையிற் பற்றிய சூலத்தோடும் தன்பால் ஒருங்கே நிறைந்த அம்புகளோடும் (தரையில்) வீழ்ந்தது. | (53) | 9169. | விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும், மின்னு வீசும் குண்டலத் துணைகளோடும், கொந்தளக் குஞ்சிச் செங் கேழ்ச் |
|
|
|