| | இந்திரசித்து வதைப் படலம் | 907 |
| சண்ட வெங் கதிரின் கற்றைத் தழையொடும், இரவிதான் அம் மண்டலம் வீழ்ந்தது என்ன, வீழ்ந்தது, தலையும் மண்மேல். | விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் - வானத்தில் விளங்கும் இரு பிறை மதிகளோடும்; மின்னு வீசும் குண்டலத்துணைகளோடும் - ஒளி வீசுகின்ற இரு குண்டலங்களோடும்; கொந்தளக் குஞ்சிச் செங்கேழ்ச் சண்ட வெங்கதிரின் கற்றைத் தழையொடும் - சுருண்ட குடுமியாகிய செந்நிறத்தையுடைய கொடிய வெப்பமான கதிர்களின் தாழ்ந்த கற்றையோடும்; இரவிதான் அம்மண்டலம் வீழ்ந்தது என்ன - சூரியன் தான் அம்மண்தலத்தில் வீழ்ந்தது என்று எண்ணுமாறு; தலையும் மண் மேல் வீழ்ந்தது - இந்திரசித்தின் தலையும் (இருகோரப் பற்களோடும் குண்டலங்களோடும், செம்பட்டை மயிர்க்குடுமியோடும்) மண் மேல் விழுந்தது. | ‘சூரியன் திங்களிரண்டொடு வீழ்ந்தது போன்றது’ என்றது இல்பொருளுவமையும், தற்குறிப்பேற்றமுமாம். கொந்தளக்குஞ்சி - சுருண்ட குடுமி. | (54) | | 9170. | உயிர் புறத்து உற்ற காலை, உள் நின்ற உணர்வினோடும், செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமாபோல், அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற எயிலுடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார். | உயிர்புறத்து உற்ற காலை உள் நின்ற உணர்வினோடும் - உயிர் உடம்பிலிருந்து புறத்தே சென்றதும், (இதற்கு முன்) உள்ளிருந்த உணர்வும்; செயிர் அறு பொறியும் அந்தக் கரணமும் சிந்துமாபோல் - குற்றமற்ற ஐம்பொறிகளும், மனம் முதலிய அந்தக் கரணங்களும் அழிவது போல; அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி - கூர்மையான பற்களையுடைய அரக்கராக உள்ளவர் எல்லாம் (இந்திரசித்து இறந்தவுடன்) ஒன்றும் செய்ய இயலாதவராய்; படையும் விட்டார் ஆன்ற எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் - |
|
|
|